districts

img

சக்தி இன்ஜினியரிங் ஆலை முன் வேலை நிறுத்த விளக்க கூட்டம்

திருப்பூர், மார்ச் 27- திருப்பூர் மாவட்ட சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்லகவுண்டம்பாளையம் சக்தி இன்ஜி னியரிங் தொழிற்சாலை முன்பாக மார்ச் 28, 29 தேதி களில் நடத்தப்படும் அகில இந்திய பொது வேலை  நிறுத்தம் விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆலை  வாயில் முன்பாக சனியன்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.தேவராஜ், துணைச் செயலாளர் எஸ்.கே.சந்திரமூர்த்தி, சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி, துணைத் தலைவர் கே.கண்ணையன், பொருளாளர் வீ.காமராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் சிறப்புரை யாற்றினார். இறுதியில் துணைச் செயலாளர் ஆர்.சிவராஜ் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.