திருப்பூர், மே 12- பின்னலாடைத் தொழிலை மீட்டெடுக்கும் வகையில் மே 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங் கம் (சைமா) உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க அந்த சங்கத் தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் அழைப்பு விடுத்துள் ளார். இது தொடர்பாக அவர் வியாழனன்று விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, பருத்தி மற்றும் நூல் ஏற்றும திக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். யூக பேர பட்டிய லில் இருந்து நீக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பருத்தியைக் கொண்டு வர வேண்டும். மே மாதம் உயர்த்தப்பட்ட கிலோ ரூ.40 உயர்வை நூற்பாலை கள் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மே 16, 17 ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதென கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அனைத்து ஜவுளி அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின்படி மே 16, 17 தேதிகளில் சைமா உறுப் பினர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்று வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண் டுள்ளார்.