districts

img

பொது விநியோகத்திட்டத்தை பலப்படுத்திடுக: சிஐடியு

கோவை, ஜூன் 1–  பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் கட்டுப் பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றக்கூடாது. பருவ கால பணியாளர்களை நிரந்திரம் செய்ய வேண்டும். கொள்முதல் பணியில் உள்ள குளறுபடிகளை களைந்திட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. பொது விநியோகத்திட்டத்தை பலப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை - மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள மண்டல அலுவலகம் முன்ற  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலப் பொருளாளர் எம்.ஏழு மலை உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றி னார். திருக்குமார் நன்றி கூறினார்.