districts

img

மடத்துக்குளத்தில் மாநிலம் தழுவிய களரி போட்டி

உடுமலை, ஜூன் 24- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் தமிழ்நாடு களரி  பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 6 ஆம் ஆண்டு களரி போட்டி நடைபெற்றது. சோழமாதேவி அக்க்ஷரா மஹாலில் நடந்த களரி போட் டிக்கு தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் செயலாளர்  வீரமணி ஆசான்  வரவேற்றார். அக்ஷரா வித்யா மந்திர் தொடக் கப்பள்ளி சேர்மன் முருகேசன், எஸ்எம் டிராவல்ஸ் நாகராஜ்,  மடத்துக்குளம் அரிமா சங்கத் தலைவர் அப்பாஸ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். அக்ஷரா வித்யா மந்திர் தொடக்கப் பள்ளி சண்முகப்பிரியா முருகேசன், மடத்துக்குளம் ஆர்சி சர்ச்  பங்கு தந்தை அலெக்ஸ் ஆண்டனி ஆகியோர் குத்து விளக்கு  ஏற்றி துவக்கி வைத்தனர். உடுமலை காவல்துறை கண்கா ணிப்பாளர் சுகுமாரன் களரி போட்டிகளை துவக்கி வைத் தார்.  இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஆர்.வி வடிவேல் வரவேற்றார். விவேகானந்தா வித்யாலயா  மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி, உடுமலை அரசு கலைக்  கல்லூரி வேதியல் துறை இணை பேராசிரியர் திருமாவள வன், வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஈஸ் வரசாமி, பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர்  கலந்து கொண்டனர். மடத்துக்குளம் வட்டாட்சியர் செல்வி,  காவல் ஆய்வாளர் பாலமுருகன், சுபாஷ், ரேணுகாதேவி அறக்கட்டளை செல்வராஜ், ஜிவிஜி பேப்பர் மில் சங்கர் மகா தேவன், வீரக்குமார், பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கோவை, திண்டுக்கல், திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் தெக்கன் களரி வர்ம அடிமுறை அறக்கட் டளை சங்கர் வேலப்பன் ஆசான், பாலக்காடு வல்லப்பட்டா  களரி சங்கம் சரவணன் குருக்கள், கோவை அபூபக்கர் சித்திக்  ஆசான், கர்நாடக களரி பயட்டு அசோசியே சன்ராஜீவ் குருக் கள், ஒத்தப்பாலம் முகமது அன்வர் குருக்கள், ஏகலைவன்  கலை சங்க தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுமேஷ் குருக்கள்  போட்டிகளை ஒருங்கிணைத்தனர். போட்டிக்கான ஏற்பாடு களை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் செயலா ளர் வீரமணி செய்திருந்தார்.