districts

img

ஸ்டேன்ஸ்மில் தியாகிகள் நினைவு தினம்

கோவை, நவ.11- கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 78 ஆவது  ஆண்டு நினைவு தினம் திங்களன்று சிஐடியு கோவை மாவட்ட  மில் தொழிலாளர் சங்கத்தினரால் அனுசரிக்கப்பட்டது.  1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று ஆயி ரக்கணக்கான ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் செங்கொடி யின் தலைமையில் உரிமை கேட்டு போராடினர். அன்று ஆட்சி யில் இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள், ஸ்டேன்ஸ் மில்  தொழிலாளர்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளி னர். இந்த துப்பாக்கி சூட்டில் 11 தொழிலாளர்கள் தங்களது உயிரை நீத்தனர்.  உழைப்பாளிகளின் உரிமைக்காகவும், செங் கொடி சங்கம் காக்கும் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிக ளுக்கு ஆண்டுதோறும் சிஐடியு சார்பில் நினைவு அஞ்சலி  செலுத்தப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக அவிநாசி மேம்பா லம் பகுதியில் உள்ள சிஎஸ் &  டபிள்யூ பஞ்சாலை முன்பு  ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் தினம் திங்களன்று அனுசரிக்கப் பட்டது.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டத் தலைவர்  கே.மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கோவை பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்டத்  தலைவர் சி.ஆர்.பிரான்சிஸ் சேவியர், மாவட்ட துணை பொதுச் செயலாளர் பி.ராஜேந்திரன், சிபிஎம் மேற்கு நகரக்  குழுச் செயலாளர் பி.சி‌.முருகன், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சிஐடியு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.