திருப்பூர், நவ. 29 - குண்டடத்தில் மாற்றுத்திறன் குழந் தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டன. தாராபுரத்தை அடுத்த குண்டடம் வட் டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பண்பாட்டு விழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, குண்டடம் வட்டார மேற்பார்வையாளர் அமுதா வரவேற்றார். குண்டடம் அர சுப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்க ரன் தலைமை தாங்கினார். புது ருத்ரா வதி பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் கொடியசைத்து மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விளை யாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத் தார். பலூன் உடைத்தல், முறுக்கு கடித் தல், ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, உருளைக்கிழங்கு சேகரித்தல் போன்ற எளிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளில் குண்டடம் ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் மற்றும் வீட்டு பராம ரிப்பில் உள்ள மாற்றுத் திறன் குழந்தை கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக் கும் தேநீர், ஸ்நாக்ஸ், உணவு முத லியன ஆசிரியப் பயிற்றுனர்களால் வழங்கப்பட்டன.விளையாட்டுப் போட் டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் ஒன் றிய ஒருங்கிணைப்பாளர் லட்சு மணன், நாகராஜன், பிரீஸ் சாந்தாமணி, ராஜாமணி, வசை தாமணி, எழிலரசி உள்ளிட்ட ஆசிரிய பயிற்றுனர்கள் பரிசு கள் வழங்கினர். இந்நிகழ்வில் மாற்றுதிறன் குழந்தைகளின் பெற்றோர் கள், இல்லம் தேடி திட்ட ஒன் றிய ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீராம்குமார், குண்டடம் அறிவியல் இயக்க கிளை உறுப்பினர்கள் மற் றும் சிறப்பாசிரியர்கள் சுமதி, சுதா, ஸ்ரீ தேவி ஆகியோர் கலந்து கொண் டனர். இவ்விழாவை மாற்றுத் திறன் குழந்தைக்கான ஆசிரியர் சாஜிதா பானு ஒருங்கிணைத்தார். ஆசிரியப் பயிற்று நர் பாபு நன்றி கூறினார்.