பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
நாமக்கல், ஜூலை 16- நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.17, நாள்:31.08.2021-இன்படி “நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகி யோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதியன்று கலைஞரின் பிறந்தநாளையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட் டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாண வர்களுக்கு 12.06.2022 வரை விடுமுறை என்பதாலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்ற மையாலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, ஒத்திவைக்கப்பட்ட பள்ளி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டிகள் ஜூலை 28 ஆம் தேதியன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் கூடுதல் கட்டிடத்திலுள்ள சுகாதாரத் துணை இயக்கு நர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டி யில் பங்குபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன் றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மேலும் சிறப்புப்பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம்
நாமக்கல், ஜூலை 16- 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்காக காத் திருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவி பெரும் திட்டத் தின் கீழ் உதவி தொகை பெற ஜூலை 1 முதல் ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித் துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, கல்வித் தகுதி களை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் பதிவு செய்து ஐந் தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், இ-மை யத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த உதவி தொகை பெற தகுதியானவர்கள். ஆதி திரா விடர் மற்றும் பழங்குடியி னர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட் டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும் மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதி வினைத் தொடர்ந்து புதுப் பித்து வருபவராக இருத் தல் வேண்டும். தகுதியுடையவர்கள் அனைத்து அசல் சான்றிதழ் கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக் கப்படுகிறது. மேலும் விபரங் களை அறிய www.tnvela ivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண் ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இவ்விண்ணப்பத் தின் 7ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வரு மாறும் தெரிவிக்கப்பட்டுள் ளது.
8 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு
திருப்பூர், ஜூலை 16- திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்காக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து அலைத்து வரப்பட்ட 8 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட் கப்பட்டனர். திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட கண்டியன்கோ வில் பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணிக்காக, விழுப்பு ரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த 8 நபர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், ஊதியம், மருத்துவ வசதி மற்றும் அவசரத் தேவைக்கு ஊருக்கு செல்ல முடியாத நிலையில் கடந்த ஒருவார காலமாக இருப்பதாக, தெற்கு தாசில்தாருக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து, கண்டியன்கோவில் பகுதியில் உள்ள கரும்புதோட் டத்தில் தொழிலாளர்களை மீட்டனர். இது தொடர்பாக கோட் டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் விசாரித்து வரு கின்றனர். 8 பேரில் ஒருவர் தரகராகவும், மற்ற 7 பேர் தொழிலா ளர்களாகவும் பணி செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின் றனர்.
உடுமலை நகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
உடுமலை, ஜூலை 16- உடுமலை நகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு குடி நீர் விநியோகம் இருக்காது என்று நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். உடுமலை நகராட்சியின் குடிநீர் தேவைக்கு திருமூர்த்தி ஆணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்ப டுகிறது. இதன்படி நகாரட்சிக்கு சொந்தமான திருமூர்த்தி நகர தலைமை குடிநீர் நிலையம் மற்றும் மேல்நிலை குடிநீர் திட்டத்தில், உடுமலை நகருக்கு குடிநீர் வரும் பிரதான குழாய் களில் உடைப்பு ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. குழாய்களில் எற்பட்ட உடைப்புகளை சரி செய்யும் வகை யில் வரும் 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி(செவ்வாய் மற்றும் புதன்கிழமை ) ஆகிய இரண்டு நாட்களுக்கு உடுமலை நகராட்சி பகுதி முழுதும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப் பட உள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், மழைக்காலமாக இருப்ப தால் குடிநீரை காய்ச்சி பருகுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மண் எடுக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு
அவிநாசி, ஜூலை 16 - திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்காக ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தொழில் பூங்கா அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், அதேபகுதியில் வெள்ளியன்று மண் எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகையில் ஈடு பட்டனர். தகவலறிந்த சேவூர் காவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில், அவர்கள் உரிய அனுமதி பெற்ற மண் எடுக்கின்றனர் என்றும் எதிர்ப்புக்களை உரியத் துறை யினரிடம் புகார் தெரிவிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது. இருப்பினும் தற்காலிகமாகப் பணி இரு நாட்க ளுக்கு நிறுத்தப்பட்டது.
அரிசிக்கு ஜிஎஸ்டி வரி: அரிசி வியாபாரிகள் போராட்டம்
திருப்பூர், ஜூலை 16- மத்திய அரசு மூட்டை செய்யப்பட்ட அரி சிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட் டத்தில் மொத்த வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டா ரம் அரிசி ஆலைகள் நிறைந்த பகுதியா கும். அதேபோல் ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரிசி ஆலைகள் ஏராளமாக உள்ளன. மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்த அரிசி விற்பனை மண்டிகளும் செயல்பட்டு வருகின் றன. இந்நிலையில் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மூட்டை செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு அனைத்து வகை உணவு தானியங் களுக்கும், 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதுவரை பதிவு செய்யப்பட்ட நிறுவ னங்களுக்கு மட்டுமே 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக் கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, கோதுமை தானியங்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயரக்கூடும். ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1050 ஆக விலை உயரும் என அரிசி வியா பாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கூடுதல் விலை உயர்வால், நடுத்தர குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்ப டும் என பொதுமக்களும் கவலையடைந்துள் ளனர். மத்திய அரசின் இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்பு களோடு இணைந்து வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மண்டி உரிமையாளர்கள் சனியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரிசி ஆலைகள் இயங்கவில்லை. மேலும், அரிசி விற்பனை மண்டிகளும் மூடப்பட்டு கிடந்தன. இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நாளில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அரவை பாதிக்கப்பட்டது. மேலும், 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விற்ப னையும் பாதிக்கப்பட்டுள்ளது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்தால் திருப்பூர் அரிசிக் கடைவீதியில் உள்ள ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வீதிகள் வெறுச்சோடி கிடந்தன.
ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளை குறைப்பதற்கு கே.சுப்பராயன் எம்.பி. எதிர்ப்பு
திருப்பூர், ஜூலை 16– ரயிலில் படுக்கை வசதி பெட்டி களைக் குறைத்து மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளாக மாற்றுவது சாமானிய மக்களுக்கு கட்டணச் சுமையை ஏற்ப டுத்தும் என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்ப ராயன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, அதற்கு பதிலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டிகளை கொண்டு வர ரயில்வே அமைச்சகத்தின் கொள்கை முடிவு அறிவிப்பு அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வரி விதிக்கப்பட்ட ரயிலுக்கு கூடுதல் நிதிச் சுமையை இது சேர்த்துள்ளது என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறியுள்ளார். இந்தக் கொள்கை முடிவு, திறமை யான மற்றும் செலவு குறைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை வழங்கு வதில் இருந்து முற்றிலும் விலகிச் செல்கிறது. சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி இடையே ராக் ஃபோர்ட் எக்ஸ்பி ரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி இடை யேயான சோழன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் இந்த முடிவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தருணத்தில், மூத்த குடிமக்க ளுக்கான சலுகைக் கட்டணமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் இம்முடிவு மூத்த குடி மக்களுக்கான அரசின் நோக்கத்தை தோல்வியடையச் செய்கிறது. இவ் வாறு கே.சுப்பராயன் கூறியுள்ளார்.
கொடுமுடியில் கந்து வட்டி கொடுமை
ஈரோடு, ஜூலை 16- கடன் பெற்றவரை மிரட்டி தாக்குதல் நடத்தி பணம் பறித்த கந்துவட்டி பைனாஸ் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி, வஉசி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (38). கரூ ரைச் சேர்ந்த ஒத்தக்கடையில் அலுவலகம் வைத்து நடத்தி வருபவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4000 கடனாகப் பெற்றுள்ளார். இதற்கு தவணையாக 15 நாட்களுக்கு ஒரு முறை என சிறுக சிறுக ரூ.8000 வரை கொடுத்துள்ளார். இது கடன் தொகைக்கு ஈடாகாது என்றும், மேலும் ரூ.10000 தர வேண்டும் என்று, கந்து வட்டி பைனான்சில் இருந்து கார்த்தி மற்றும் ஒருவர் வீடு தேடி வந்து கேட்டுள்ளனர். இதனை மறுத்த வஉசி நகர் கார்த்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல் துறையில் புகார் செய்துள்ளார். தொடர்ந்து கந்து வட்டிக்காரர்கள் வீடு தேடி வந்து தகாத வார்த்தைகளில் பேசி வட்டி வசூலித்துள்ளனர். இந்த அடாவடி தனத்தை வஉசி நகர் கார்த்திக் கண்டித்துள்ளார். இதனால், கடந்த இரு தினங்க ளுக்கு முன் அண்ணா நகர் பகுதியில் வைத்து கந்து வட்டி கார்த்திக் மற்றும் அவருடன் வந்தவர் வஉசி நகர் கார்த்திக்கை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம டைந்த கார்த்திக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் கார்த்திக்கிடம் மருத்து வமனையில் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதனடிப்படை யில் கொடுமுடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களின் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.