districts

தருமபுரியில் சிறப்பு தொழில் கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தருமபுரி, டிச.7- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தருமபுரி கிளை அலுவலகத்தில்  சிறப்பு தொழில் கடன் முகாம்   நடை பெற  உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்ட மேம்பாட்டுக் கழக கட்டிட முதல் தளத்திலுள்ள  தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழக தருமபுரி கிளை அலுவலகத்தில் சிறு, குறு  மற்றும் நடுத்தர  தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 15 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில் களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.75.00 லட்சம் வரை வழங்கப்படும்.   இச்சிறப்பு முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன்  விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகித சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு 04342- 260866, 260272 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என  மாவட்ட  ஆட்சியர்‌அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.