உடுமலை, டிச.9- உடுமலை நகராட்சிக்கு உட் பட்ட யுகேசி நகரில் குடியிருப்பு களுக்குள் பாதாள சாக்கடை கழிவுநீர் புகுந்ததால் ஆவேச மடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை நகராட்சி 14 ஆவது வார்டுக்கு உட்பட்ட யுகேசி நகரில் உள்ள நான்கு வீதிக ளில் 400க்கும் மேற்பட்ட குடும்பங் களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதி யில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து கழிவுநீர் வீதி கள் எங்கும் தேங்கி நின்று வரு கிறது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகா ரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில், தற்பொழுது பெய்த மழை யால் சாக்கடை கழிவு நீர் அனைத் தும் அப்பகுதிகளிலுள்ள குடி யிருப்புகளில் புகுந்தது. இதனால் , அப்பகுதி மக்கள் பெரும் சிரமத் திற்குள்ளானதோடு நோய் தொற்று அபாயத்திற்கும் ஆளாகி யுள்ளனர். இந்நிலையில், நகராட்சி நிர் வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து வியாழனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் உடு மலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஎம் நகர செயலா ளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கனகராஜ், நகரக்குழு உறுப்பினர்கள் தோழன்ராஜா, லால் கிளை செயலாளர்கள் ராம சாமி, சீத்தம்மாள் மற்றும் சிஐ டியு நிர்வாகிகள் ராஜீக்அலி, அபி சேக் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், உடு மலை நகராட்சியில் வடகிழக்கு பருவ மழையால் குடியிருப்பு பகு தியில் தேங்கிய கழிவு நீரை வெளி யேற்ற வேண்டும் என்ற கோரிக் கையை தற்பொழுது வரை நக ராட்சி நிர்வாகம் நிறைவேற்றா மல் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் யுகேசி நகர் பகுதி முழு வதும் சாக்கடை நீர் வீடுகளிலும், குடிநீர் குழாய்களிலும் கலந்து வருவதால் அனைவருக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
ஆகவே, நக ராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் உள்ள மழைநீரை வெளியேற்றுவதுடன், பாதாள சாக்கடை உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த நகராட்சி ஆணை யாளர் சத்தியநாதன், தற்பொழுது யுகேசி நகரில் சுகாதார பணியா ளர்களால் கழிவு நீர் அனைத்தும் முழுமையாக வெளியேற்றப் பட்டு வருகிறது. மேலும், அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. இதன் பின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறை வேற்றப்படும் என உறுதிய ளித்தார். இதையடுத்து போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.