districts

img

சக்தி இன்ஜினியரிங் தொழிலாளர்கள் போனஸ் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 17 – திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  வட்டம் பல்லகவுண்டன்பாளை யதில் இயங்கி வரும் சக்தி ஆட்டோ  காம்போனெண்ட்  நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போனஸ் கோரிக்கையை வலியு றுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சக்தி ஆட்டோ காம்போனென்ட்  தொழிற்சாலை தொழிலாளர்க ளுக்கு இவ்வாண்டு போனஸ் வழங் குவது தொடர்பாக நிர்வாகத்துடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்திருந்த போதிலும், 8.33 சத விகித போனஸ் மட்டுமே தருவதாக  நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட் டது. இது தொடர்பாக கடந்த சனிக்கி ழமை சிஐடியு தொழிலாளர் பேர வைக் கூட்டம் நடத்தி கலந்தாலோ சனை செய்யப்பட்டது. நிர்வாகம் முன்மொழியும் போனஸ் ஏற்புடைய தல்ல என்று இதில் தொழிலாளர்கள்  ஒருமனதாக ஆட்சேபம் தெரிவித்த னர். எனவே போனஸ் கோரிக் கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. அதன்படி திங்களன்று முதல்கட் டமாக சக்தி ஆலை வாயில் முன்பாக  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இப்போராட்டத்திற்கு சிஐ டியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார். சங்கச் செயலா ளர் ஜெ.கந்தசாமி, துணைத் தலை வர் கே.கண்ணையன், பொருளாளர்  வி.காமராஜ் ஆகியோர் போனஸ்  கோரிக்கை குறித்து உரையாற்றினர். நிறைவாக, சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார். இந்த கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் கள் திரளானோர் கலந்து கொண்ட னர். முடிவில் சங்கத் துணைச் செய லாளர் ஆர்.சிவராஜ் நன்றி கூறி னார்.