districts

ஏரியில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்!

தருமபுரி, ஜூலை 7- தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி யிலுள்ள ரெட்டேரியில் தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைந்து நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டு களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரி யில் கலந்து வந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு, தருமபுரி நகராட்சியில், ரூ.32 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது. இதன் முதற்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள் ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங் கிணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மதிகோன்பாளை யம் - அரூர் பிரிவு சாலையில், பாதாள சாக் கடை திட்ட கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 5  மணி முதல் 9 மணி வரையும், 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பாதாள சாக்கடை மின் மோட் டார் இயக்கி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கு சுத்திகரிப்பு செய்து இறுதியாக கிடைக் கும் கழிவு, மண் படிவம் சேகரித்து வைக்கப் படுகிறது. இந்நிலையில், மதிகோண்பாளையத்தி லிருந்து செல்லும் பாதாள சாக்கடை கழிவுநீர், ரெட்டேரி வழியாக காந்திபாளையம் பகுதி யில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத் திற்கு செல்கிறது. இந்த சுத்தகரிப்பு நிலையம் பழுதடைந்து அவ்வப்போது செயல்படுவ தால், 6 மாத காலமாக தினசரி 19 வார்டு களில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஏரியின் வழியாகச் செல்லும் பாதாள சாக் கடை குழாய் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஒரு உடைப்பை சரி செய்த நகராட்சி நிர்வாகம் இரண்டு இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு களை சரிசெய்யாமல் இருப்பதால், ரெட்டேரி முழுவதும் நிரம்பி கழிவுநீராக காட்சியளிக் கிறது. தருமபுரியில் இருந்து ரெட்டேரி ஏரிக் கரை வழியாக திருப்பத்தூர், வேலூர், சென்னை வரை செல்லும் முக்கிய சாலை யாக உள்ளது. இந்த ஏரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மற்றும் இவ் வழியாக செல்லும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், செட்டிக்கரை பஞ்சாயத்திற்குட் பட்ட 3 கிராமங்களுக்கு இந்த ஏரியை ஒட்டிய  பகுதியில் நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதிலிருந்து குடிநீர் வழங்கி வரு கிறது. இந்த குடிநீரை குடித்து வரும் பொது மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஒரு வித மான அரிப்பு அலர்ஜி நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். கால்நடை களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கிணற்றில் நிலத்தடி நீர் முழுவதும் உப்பு  கலந்து பசுமை கலரில் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட  அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலை யிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.