districts

சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு: உதயநிதி துவக்கி வைத்தார்

நாமக்கல், மார்ச் 3- சேந்தமங்கலம் அருகே உள்ள  ஜங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல் லிக்கட்டு போட்டியினை, வெள்ளி யன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத் தார். நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம் அருகே உள்ள ஜங்களா புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், வெள்ளி யன்று கொடியசைத்து துவக்கி வைத் தார். முன்னதாக, அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தலைமையில், ஜல் லிக்கட்டு வீரர்கள் தமிழ்நாடு அர சின் ஜல்லிக்கட்டு போட்டி  தொடர்பான விதிமுறைகளுக்குட் பட்டு, அனைத்து விதிமுறைகளை யும் முறையாக கடைபிடித்து, சாதி, இன பாகுபாடின்றி அனைத்து வீரர் களும், ஒற்றுமையாக செயல்பட்டு,  காளைகளை துன்புறுத்தாமல்,

அமைதியாக ஜல்லிக்கட்டை விளை யாடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொண்டனர். இப்போட்டியில், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட னர். மேலும், 400  காளைகள் வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப் பட்டன. மாடுபிடி வீரர்களுக்கான 70 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, 5 நடமாடும் மருத்துவமனை, காளை களுக்கான கால்நடை மருத்துவர் கள் குழு, காவல் துறையினர் பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்பின் ஜல்லிக்கட்டு போட் டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமை யாளர்களுக்கும் உதயநிதி ஸ்டா லின் பரிசுகளை வழங்கினார்.  முன்னதாக, நாமக்கல் மோக னூர் சாலையில் உள்ள அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும்  அனைவருக்கும் கல்வி திட்ட நாமக் கல் வட்டார வள மையத்தை பார் வையிட்டு ஆய்வு செய்தார்  அங்கு படிக்கும் மாணவ மாண வியர்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாணவ, மாணவிகள்  வள  மையத்தில் வந்து கல்வி கற்கும் பொழுது அவர்களுக்கு ஏற்பட் டுள்ள முன்னேற்றம் குறித்து ஆட்சி யர் ஸ்பிரேய.பி.சிங்கிடம் கேட்ட றிந்தார். இதனையடுத்து, மாணவர் களுடன் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச் சியாக கலந்துரையாடினார்.  இந்நிகழ்வுகளில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.