தருமபுரி, மார்ச் 23- பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை யில், கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங் களை தாமதப்படுத்தாமல் அரவைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி, விவ சாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட் டுறவு சக்கரை ஆலையில் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சர்க்கரை ஆலைக்கு லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் கரும்புகள் கொண்டு வரப்படு கிறது. லாரிகளில் வரும் கரும்புகளை உடனே ஆலைகளில் இறக்கப்படுகிறது. டிராக்டரில் வரும் கரும்புகளை நாள்கணக்கில் காத்தி ருக்க வைத்து கரும்பு இறக்கப்படுகிறது. இதனால் கரும்பின் எடை குறைந்து இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டினர். இதையடுத்து சர்க்கரை ஆலை உள்ளே டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சமையல் செய்து நூதன முறையில் தர்ணா வில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த வந்த ஆலை அதிகாரிகள் சமரசம் செய்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்களில் கரும்பு பாரம் ஏற்றி வந் துள்ள வாகனங்களை நாள் கணக்கில் காத்திருக்க வைப்பதால், கரும்பின் எடை குறைந்து இழப்பு ஏற்படுகிறது. லாரிகளில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 24 மணி நேரமும், டிராக்டரில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 50லிருந்து 60 மணி நேரமும் இருப்பதால் வெயிலில் கரும்பு காய்ந்து எடை குறைகிறது. லாரிக்கு வழங்கும் நேரத்தை டிராக்டருக்கும் வழங்க வேண்டும். வாகனங் களுக்கு டோக்கன் வழங்குவதை ஒழுங்குப் படுத்த வேண்டும். ஆலைக்குள் வந்த கரும்பு பாரத்துடன் காத்திருக்கும் வாகனங்களை விரைந்து அரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.