கோவை, நவ. 1- பொள்ளாச்சி அருகே முறையான ஆவணங் களின்றி கனிமவளங்கள் கடத்தி செல்ல முயன்ற மூன்று டிப்பர் லாரிகளை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய்த் அலுவலர் விஜய குமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலத்திற்கு கற்களை ஏற்றி சென்ற மூன்று லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். இதில், முறையான அனுமதி சீட்டு இல்லாமல் 7 யூனிட் அளவுள்ள சாதாரண கற்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, மூன்று டிப்பர் லாரியை கைப்பற்றி ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணை யில் முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு சென்ற மூன்று டிப்பர் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனிம வளத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். ஏற் கனவே இதுபோன்று கனிமவளங்களை அனுமதியின்றி எடுத்துச்சென்ற 8 லாரிகள் இப்பகுதியில் பறிமுதல் செய்தது குறிப்பி டத்தக்கது.