districts

img

ரசாயனத்தினால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

சேலம், மே 11 - ரசாயனங்களைப் பயன்படுத்தி , செயற்கை முறையில் பழுக்க வைக் கப்பட்ட மாம்பழங்களை திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதி காரிகள் பறிமுதல் செய்து அழித் தனர்.  சேலம் மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலம், சின்ன கடைவீதி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் தொடர்ந்து மாம் பழக் குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் வியாழனன்று சின்ன கடைவீதி, அரசமரத்து பிள்ளையார் கோவில் தெரு  உள்ளிட்ட பகுதியில், மாவட்ட  உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது ஏடிஎஸ் மற்றும் கேஎஸ்ஆர் குடோனில் அதிகளவு எத்திபான்  ரசாயனத்தை நேரடியாக  மாம்பழங்கள் மீது தெளித்து,  பழுக்க வைத்தது கண்டறியப் பட்டது. இதனையடுத்து 5 டன்  மாம்பழங்களை உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு  நியமன அலுவலர் கதிரவன் கூறு கையில், மாம்பழ விற்பனையாளர் களிடம் ஏற்கனவே பலமுறை ரசா யனம் தெளித்து பழுக்க வைத்து,  விற்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டது. இருந்தபோதிலும், செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய் வதாக தொடர்ந்து புகார் வந்தது.  அதனடிப்படையில் சின்ன கடை வீதி பகுதியில் எத்திபான் ரசாய னத்தை தெளித்து பழங்களை பழுக்க வைத்து, விற்கப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. 5 டன் மாம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. மேலும், அங்கீகாரம் இல்லாமல் கடை நடத்தியதற்கும்,

ரசாயனம் கலந்து பழங்களை விற்பனை செய்தவர்களுக்கும் நீதிபதி தீர்வு அலுவலர் மூலம் அப ராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்படும், என்றார். திருப்பூர் இதேபோல்,திருப்பூர் மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அதி காரிகள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து வியாழனன்று திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க் கெட், கே.எஸ்.சி. பள்ளி சாலை மற்றும் பழ குடோன் வீதி ஆகிய இடங்களில் உள்ள மாம்பழம் மொத்த மற்றும் சில்லறை விற் பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இதில் கே.எஸ்.சி. பள்ளி வீதிக்கு பின்புறம் உள்ள அதிய மான் முதல் தெரு பகுதியில்  குடோன் ஒன்றில் வைக்கப்பட் டிருந்த 3 டன் மாம்பழங்கள் ரசா யனப் பொடியின் மூலம் செயற்கை யாக பழுக்க வைக்கப்பட்டதைக் கண்டறிந்தனர்.  இதேபோன்று, கே.எஸ்.சி பள்ளி அருகே பழ குடோனில் 500  கிலோ மாம்பழங்கள் செயற்கை  முறையில் பழுக்க வைத்திருந்த தையும் கண்டுபிடித்தனர். இந்த பழங்களையும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த பழங்களை மாநகராட்சி உரக் கிடங்கிற்கு உரம் தயாரிப்பதற்கு அனுப்பி வைத்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும். இது தொடர்பாக ஐந்து  மொத்த பழம் விற்பனை கடை களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்  வழங்கி, எச்சரிக்கை விடுத்துள் ளனர்.