districts

அரிவாளைக்காட்டி பணம் பறிப்பு - 3 பேர் கைது

அவிநாசி, டிச.4- பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி பணம் பறித்த 3 பேரை காவல்துறையினர் வெள்ளியன்று கைது செய்தனர். பெருமாநல்லூர் அருகே கருக்கன்காட்டுபுதூர் பகுதி யைச் சேர்ந்தவர் வீராசாமி (61). இவர் அதே பகுதியில் உணவ கம்  ஒன்று நடத்தி வருகிறார்.  இந்நிலையில், வெள்ளியன்று  உணவகத்திற்கு வந்த 3 வாலிபர்கள், வீராசாமியிடம் அரி வாளை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அதனை தொடர்ந்து வீராசாமியில் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்,   பணம் பறித்து தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில், அவர்கள் பெருமாநல்லூர் கருக்கன் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (19), மணிகண் டன் (24), கொண்டத்தம்மன் நகரை சேர்ந்த சீனிவாசன் (24), என்பது தெரியவந்தது.  இதையடுத்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது  செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாயை யும் பறிமுதல் செய்தனர்.