கோவை ஜூன் 22 பணி நேரத்தை வரைமுறை செய் திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சென்னையில் நடை பெறும் போராட்டத்திற்கு கோவையிலி ருந்து 5 ஆயிரம் பேர் திரள்வது என மக்களைத் தேடி மருத்துவத்திற்கான ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கோவை கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவ லகத்தில் நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை ஏற்றார். இதில், மாநில அரசு சுகாத்துறை ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 25,000 ஊதியமாக வழங்க வேண்டும். பணி நேரத்தை வரைமுறை செய்ய வேண்டும். ஊழி யர்களுக்கான ஊதியத்தை மகளிர் திட்டத்தின் மூலம் வழங்க கூடாது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் பெருந்திரல் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொள்வதென தீர்மா னிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி.லட்சுமி, மண்டல பொறுப்பாளர்கள் சாய் சித்ரா, செல்வி, மகாலட்சுமி, நிர்மலா உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர்.