மதவெறி அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் அபிமன்யுவின் நினைவுதினம், இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் பெருந்துறையில் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் நவீன், செயலாளர் ரஞ்சித், மாவட்டக்குழு உறுப்பினர் சுகுணா பைரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.