districts

img

புதிய அறிவியல் கண்டுபிடிப்பு - சேலம் அரசுப்பள்ளி மாணவி சாதனை

சேலம், செப் 19- தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில், சேலம் அரசு பள்ளி மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடிச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி யின் மகள் இளம்பிறை. இவர் வாழப் பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் 11 ஆம் வகுப்பு படித்து வருகி றார். இவர் தனது அறிவுத்திறனை பயன்படுத்தி, அடுக்குமாடி குடியி ருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் இயந்திரத்தில் விபத்தை தடுக் கும் கருவியை வடிமைப்பு செய்தார். இந்த புதிய கண்டுபிடிப்பை தேர்வு  குழுவினர் பரிசீலனை செய்து,  தேசிய அளவிலான இன்ஸ்பயர் மனாங் விருதும், மூன்றாம் பரிசும் கிடைத் தது. தமிழகத்திலிருந்து தேசிய அள விலான இந்த விருதை மாணவி இளம்பிறை முதன்முறையாக பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது. தலை நகர் புதுடெல்லியில் விஞ்ஞான் பவன் வளாகத்தில் செப்.16 ஆம் தேதி நடைபெற்ற விழாவில், ஒன்றிய அறி வியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெயேந்திர சிங் மாணவி இளம்பிறைக்கு இந்த விருதினை வழங்கி பாராட்டியுள்ளார். தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று, தமிழகத்திற்கும், வாழப் பாடி அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி இளம்பிறைக்கு கல் வித்துறை உயரதிகாரிகள், பள்ளி  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற் றும் பல்வேறு அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இப் போட்டியில் வென்றது பெருமிதமாக உள்ளது எனவும், தன்னை ஊக்கப் படுத்தி விருது பெறுவதற்கு உத விய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என மாணவி இளம்பிறை தெரி வித்துள்ளார்.  மேலும், நல்ல முறையில் கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று  மருத்துவராகி கிராமப்புற மக்க ளுக்கு மருத்துவ சேவை ஆற்றுவது  தனது எதிர்கால லட்சியம் எனவும் இளம்பிறை தெரிவித்தார்.

;