districts

img

பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து தலித் மக்களுக்கு வழங்க சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு வலியுறுத்தல்

சேலம், ஜூலை 4- தனியார் ஆதிக்கத்தில் உள்ள  பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை எளிய தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்  என தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சேலம் மாவட்ட மாநாடு வலியு றுத்தியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சேலம் மாவட்ட 4 ஆவது மாநாடு சேலம் பதிரெஸ்ட் உணவகத்தில் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தை வேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் வர வேற்புரையாற்றினார். மாநிலச் செய லாளர் டி.மாதையன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர்  வீ.இளங்கோ வேலை அறிக்கை முன்வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, அருந்ததியர் அமைப்பு மாநில அமைப்பாளர் அலமேலு, ஆதித்தமிழர் பேரவை சேலம் மத்திய மாவட்ட தலைவர் கோவிந்தன், தமு எகச மாவட்ட செயலாளர் ஜி.கண் ணன், மாதர் சங்க மாவட்ட செயலா ளர் ஐ.ஞானசௌந்தரி, இந்திய வங்கி  ஊழியர் சங்கத்தின் எஸ்ஏ.ராஜேந்தி ரன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கலியபெருமாள், வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்  ஆகியோர் வாழ்த்தி உரையாற்றி னர். 

தீர்மானங்கள்

சாதியின் பெயரில் இருக்கும் தெரு பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை அகற்ற வேண் டும். பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். தாதம்பட்டி சுடுகாடு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதில் மாவட்ட தலைவ ராக ஆர்.குழந்தைவேலு, செயலாள ராக வீ.இளங்கோ உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னதாக, சாதி ஆதிக்கவாதி களால் படுகொலை செய்யப்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் சிறுமி யின் குடும்பத்தார் மாநாட்டில் பங்கேற் றிருந்தனர். அவர்களுக்கு தலைவர் கள் ஆறுதல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்த ஸ்டாலின் - புவனேஸ்வரி தம்பதியினர் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு உரையாற்றினர்.