districts

img

சேலம்: பள்ளி மாணவன் தற்கொலை - உறவினர்கள் ஆவேசம்

சேலம், மார்ச் 19- சேலத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவராகரத்தில் பள்ளி மீதும், பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு தர்ணா  போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், கருப்பூர் வெள்ளக் கல் பட்டி மஞ்சுளம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் சேலம் மாநகரம் நால் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகி றார். கடந்த வியாழனன்று பள்ளி முடித்து விட்டு மாலை வீட்டுக்கு செல்லும் போது சாலையில் விசில் அடித்ததாக கூறப்படு கிறது. இதனை கண்ட அப்பள்ளியின் ஆசி ரியை, வெள்ளியன்று காலை மாண வனை அழைத்து கண்டித்ததுடன், அவரின் பெற்றோரை வரச் சொல்லி உத்தரவிட் டுள்ளார். இதனால் அச்சமடைந்த அம்மா ணவன் அன்றைய தினம் மாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதை யடுத்து அவரது உடலை கைப்பற்றி கருப் பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சனியன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்க ளது உறவினர்கள் திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தனது மகன்  எந்த தவறும் செய்யவில்லை. சக மாணவர் களுடன் சந்தோசமாக சென்றதை தவறா கப் புரிந்துகொண்டு ஆசிரியை தனது மகனை மிரட்டியுள்ளார். இதனால் மன வேதனையில் எனது மகன் தற்கொலை செய்து கொண்டார். எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத் திட வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து உரிய  விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல்துறை யினர் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.