districts

img

சேலம்: சௌடேஸ்வரி கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு

சேலம்,மே 16- சேலம் சௌடேஸ்வரி அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, சேலம் சௌடேஸ்வரி இரு பாலர் அரசு உதவிபெறும் கல்லூரியை மக ளிர் கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வா கம் முடிவெடுத்துள்ளது. கல்லூரி நிர் வாகத்தின் இந்த முடிவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர்ச் ்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தரிடம் மனு கொடுத்தும், பெற்றோர் கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.  இந்நிலையில் திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் எஸ். பவித்ரன் தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி. கண்ணன், மாநகர செயலாளர் வி. அருண்குமார் மற் றும் சேலம் சௌடேஸ்வரிகல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சி யரை சந்தித்து அளித்தனர்.