காலாவதி தேதி இல்லாமல் மிட்டாய்கள் விற்பனை
காலாவதி தேதி இல்லாமல் மிட்டாய்கள் விற்பனை உடுமலை, ஜூன் 30- குழந்தைகள் அதிகம் வாங்கும் திண்பண்டங்களில் காலாவதியாகும் தேதி இல்லாமல் விற்பனை செய்யப் படுவது குறித்து, சுகாதார ஆய்வாளர்கள் உரிய சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிகள் அருகே மற்றும் நகரம், கிராமங்களில் இருக்கும் அனைத்து கடைகளி லும் விற்பனை செய்யப்படும் திண்பண்டங்களில், கலக்கும் மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கும் தேதி, காலாவதியாகும் தேதி இவை எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பொருட்களின் தரம் குறித்து எந்தவித உத்தர வாதமும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், பொருள் விற்பனைக்கு வரும்போது அதன் தரம் குறித்த சான்றிதழ் அரசிடம் பெற வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. ஆனால், குழந்தைகளை கவரும் வகை யில் வண்ண வண்ண நிறத்தில் பலவகையான மிட்டாய் கள் மற்றும் பிஸ்கட்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த உணவு பொருட்களில் கலக்கும் மூலப்பொருட்கள் குறித்து தெரிய படுத்த வேண்டும் என்ற சட்டத்தை பல நிறுவனங்கள் நடைமுறைபடுத்துவது இல்லை. மேலும், பொருட்கள் தயாரிக்கும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதிகள் குறித்து விற்பனை செய்யும் பொருட்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் அச்சிட வேண்டும். இந்த விதிகளை பல நிறுவ னங்கள் நடைமுறைபடுத்தாமல் பொருட்களை விற்ப ணைக்கு அனுப்பி விடுகிறது. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்துக் கடைகளிலும் சென்று ஆய்வுகள் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
ரயில்களின் எண்கள் இன்று முதல் மாற்றம்
ரயில்களின் எண்கள் இன்று முதல் மாற்றம் சேலம், ஜூன் 30- கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் திங்களன்று (இன்று) மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை 1 முதல் 12507 என்ற எண்ணில் இயங்கி வந்த திருவனந்தபுரம் - சில்சார் வாராந்திர விரைவு ரயில் 15677 என்ற எண்ணில் இயங்கும். 12508 என்ற எண்ணில் இயங்கி வந்த சில்சார் - திருவனந்தபுரம் விரைவு ரயில், 15678 என்ற எண்ணில் இயங்கும். அதேபோல, 12515 என்ற எண்ணில் இயங்கி வந்த கோவை - சில்சார் வாராந்திர ரயில் 15675 எண்ணிலும், 12516 என்ற எண்ணில் இயங்கி வந்த சில்சார் - கோவை வாராந்திர ரயில் 12676 என்ற எண்ணிலும் இயக்கப்படும். 22503 என்ற எண்ணில் இயங்கி வந்த கன்னியாகுமரி - திப்ருகர் விரைவு ரயில் 15905 என்ற எண்ணிலும், 22504 என்ற எண்ணில் இயங்கி வந்த திப்ருகர் - கன்னியாகுமரி விரைவு ரயில் 15906 என்ற எண்ணிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் ஈரோடு, ஜூன் 30- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்ற வியல் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சி.ஆறுமுகம். துணைத் தலைவர் வி.குமரேசன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நியாய விலைக்கடைகளில் புகாருக்கு இடமளிக்கக்கூடாது
நியாய விலைக்கடைகளில் புகாருக்கு இடமளிக்கக்கூடாது நாமக்கல், ஜூன் 30- நியாயவிலைக் கடைகளில் புகாருக்கு இடமளிக் காதவாறு விற்பனையாளர்கள் பணியாற்ற வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை வட்ட நியாய விலைக்கடை பணியா ளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நாமக்கல்லில் சனியன்று நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கங்களின் மண் டல இணைப்பதிவாளர் க.பா.அருளரசு தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டப் பொருட்களை நுகர்வோருக்கு சரியான முறையில் வழங்க வேண்டும். வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் கணிவு டன் நடந்துகொள்ள வேண்டும். பொருட்களின் இருப்பை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளை சரியான நேரத்துக்கு திறக்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காதவாறு பணியாற்ற வேண்டும், என்றார்.
டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசி
டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசி பொள்ளாச்சி, ஜூன் 30- டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சலை தடுப்பதற் கான தடுப்பூசி தயாரிப்பின் முதற்கட்ட ஆராய்ச்சி நடை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் இம்யூனி நியூலாஜிக்கல் என்ற நிறுவனம் ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்து வமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கி பிரிவிற்கு தேவை யான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ் வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தியன் இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆனந்த்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைதராபாத்தில் செயல் பட்டு வரும் எங்கள் நிறுவனம் விலங்குகள் மற்றும் மனிதர்க ளுக்கு பரவும் நோய்களை வருமுன் காப்போம் என்ற திட்டத் தின் அடிப்படையில் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயார் செய்து, இந்தியா மட்டுமல்லாது 60 வெளி நாடுகளுக்கும் ஏற்று மதி செய்து வருகிறோம். தற்போது டெங்கு, சிக்கன் குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் தயா ரிப்பதற்கான முதல் கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெங்கு தடுப்பூசி மருந்துகள் விநிநோயகம் செய்யப்படும், என்றார்.
பாறைக்குழியில் காஸ்டிங் மண்: விவசாயிகள் வேதனை
பாறைக்குழியில் காஸ்டிங் மண்: விவசாயிகள் வேதனை அவிநாசி, ஜூன் 30- அவிநாசி அருகே உள்ள அம்மாபாளையம் பாறைக்குழி யில் காஸ்டிங் மண் இரவு நேரங்களில் கொட்டப்பட்டு வருவ தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவ சாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி, 19 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் பெரும் பரப்பளவில் பாறைக்குழி அமைந்துள்ளது. இந்தப் பாறைக்குழியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால் பல பாதிப்புகளை சந்தித்து வந்த அப்ப குதி பொதுமக்களின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம் செய்யப்பட் டது. தற்பொழுது இக்குழியில் இரவு நேரங்களில் பல லோடு கள் லாரிகள் மூலமாக காஸ்டிங் மண் கொட்டப்பட்டு வருகி றது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டு, தண்ணீரின் தன்மை மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், விவ சாயம் செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வா கம் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.
குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை கைது
குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை கைது உதகை, ஜூன் 30- பெற்ற குழந்தையை அடித்துக்கொன்ற தந்தையை உதகை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், பழைய உதகை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (31). இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சனி யன்று காலை நீண்ட நேரமாகியும் குழந்தையிடம் எந்த அசை வும் காணப்படாததால், அதிர்ச்சியடைந்த ரம்யா குழந் தையை உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை யின் இறப்பில் சந்தேகம் இருந்ததால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து, உதகை மத்திய காவல் நிலையத் தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் முரளித ரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த சில நாட்களாகவே குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியாததால் கணவர் பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார். இதற்கு ரம்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், சனியன்று ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை அழுததால், ஆத் திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் பிரேமை கைது செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகு தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாம்பூச்சி சிறப்பு பூங்கா விரைவில் திறப்பு
பட்டாம்பூச்சி சிறப்பு பூங்கா விரைவில் திறப்பு கோவை, ஜூன் 30- வெள்ளலூரில் பட்டாம்பூச்சிகளுக்கான சிறப்பு பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. கோவை மாவட்டம், வெள்ளலூரில் பட்டாம்பூச்சிக ளுக்கான சிறப்பு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பட்டாம்பூச்சிகளின் உணவு மற்றும் வாழ்விட தேவை களை பூர்த்தி செய்யும் வகையில் பூச்செடிகள், மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் காணப்படும் 103 வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன. பூங்காவில், தற்போது 70க்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் 270 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின் றன. பூங்காவிற்கு நுழைவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்ப டாமல் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப் பட உள்ளது. இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தாவரவியல் மற்றும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள ஏற்ற இடமாகவும் இது அமையும். இப்பூங்கா வின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வரு கின்றன. விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்ப டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.