districts

img

சைமா டெக்ஸ்ஃபேர் கண்காட்சி

கோவை, ஜூன் 21- கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ் சாலைகள் சங்கம் (சைமா) இன்று 14-வது சைமா டெக்ஸ்ஃபேர் கண்காட்சி ஜவுளி இயந்திரங்கள்,உதிரி பாகங் கள் மற்றும் துணைக் கருவிகளின் சர்வதேச கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சி, 24ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 6 வரை நடைபெறும். இந்த கண்காட்சி மூலம் ரூ.1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து சுமார் 10,000 பேர் முதல் நாளில் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். குஜராத், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இத்தாலி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து ஜவுளி  இயந்திர தயாரிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் 240 ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 260 ஸ்டால்கள் அமைத்து பொருட்களை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.  இறக்குமதி பொருட்களுக்கு மாறாக உள்நாட்டில் குறைந்த விலையில் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் உற் பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி நோக்கம் என்றும் இதற்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடை யாது.