திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் சாலை தெற்கு உழவர் சந்தைக்கு அருகில் சாலையோர வியா பாரம் செய்வது குறித்து, வெள்ளியன்று சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. பல்லடம் சாலை தெற்கு உழவர் சந்தை அருகில் சாலையோர வியாபாரம் செய்வது குறித்து சார் ஆட்சியர் தலைமையில் கடந்த வாரம் வியாழனன்று விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது எடுக்கப் பட்ட முடிவுகள் படி அடுத்த இரண்டு தினங்க ளுக்கு உழவர் சந்தையில் விவசாயிகள் வியா பாரம் செய்தனர். இதையடுத்து மீண்டும் ஞாயிறன்று உழவர் சந்தை அருகே காய்கறி களைச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிப்.9 ஆம் தேதி சார் ஆட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் பி.பாலன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஜெயமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், சட்ட விதிகளுக்கு உட் பட்டு உழவர் சந்தைக்கு 130 மீட்டர் தொலை வில் சாலை ஓரத்தில் பழங்களை வைத்து தினசரி காலை 4 மணி முதல் 8 மணி வரை வியா பாரம் செய்து கொள்ளலாம்.உழவர் சந்தைக் குள் விற்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய கூடாது எனச் சார் ஆட்சியர் சாலை யோர வியாபாரிகளிடம் வலியுறுத்தியதை அடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவ டைந்தது. இப்பேச்சுவார்த்தையில், உழவர் சந்தை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர், காவல்துறையினர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.