சேலம், ஜூலை 19- காடையாம்பட்டி அருகே பொம்மி யம்பட்டி ஊராட்சியில் புதியதாக அரசு பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் செவ்வா யான்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பொம்மியம்பட்டி ஊராட்சி, கோம்பையில் சுமார் 300க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக் களின் குழந்தைகள் 50க்கும் மேற்பட் டோர் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி யில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் சுமார் 30 வருடம் பழமையானதால், எப்பொழுது வேண்டு மென்றாலும் இடிந்து விழும் அபாயத் தில் உள்ளது. எனவே, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேச மடைந்த பெற்றோர்கள் மற்றும் அப் பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப் பட்டி காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப் போது, அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையிடம் இதுகுறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால், சமாதானமடைந்த போராட் டக்காரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.