districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சிஐடியு நூதனப் போராட்டம்

சேலம், ஏப்.13- பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் கந்தம் பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய மோடி அரசு மோட்டார் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். தனி யார் கார்ப்பரேட் கால் டாக்சி நிறுவனங் களின் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண் டும். சுங்கச்சாவடிகளில் கட்டண கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சேலம் கந்தம்பட்டி வட்டார போக்கு வரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், உரிமைக்குரல் ஓட்டு நர் தொழிற்சங்கம், இரண்டு சக்கர வாக னம் மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப் போர் நலச்சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட துணை தலைவர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். முன்னதாக, சேலம் லாரி மார்க் கெட் பகுதியில் இருந்து காளை மாடுகளை நான்கு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்து வந் தனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், சாலை போக்குவரத்து மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன், இரண்டு சக்கர பழுதுபார்ப்பு நல சங்க  மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், உரி மைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகி கள் ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.