சேலம், மார்ச் 15- சேலம் பெரியார் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராக பேசிய மாணவிகள் மீது பழிவாங் கும் நடவடிக்கை மேற்கொண்ட பல்கலைக்கழகத்தின் செயலுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்ட னம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்தாண்டு பிரேம் குமார் என்ற ஆசிரியருக்கு ஆதரவான போராட் டத்தில், வரலாற்று துறையைச் சேர்ந்த மாண விகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதற்கு பல்கலைக்கழக நிர்வா கம் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தது மற்றும் செய்தியாளர்களை சந்தித்து பேசியது குற்றம் எனக்கூறி மாணவிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட்டு வந்தது. மேலும், இனிமேல் உரிய அனுமதி பெறாமல் செய்தி யாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை சந்திக்கக்கூடாது என கடிதம் எழுதி வாங்கி யுள்ளனர். தற்போது முதுகலை பட்டப்படிப்பை முடித்து அடுத்த மேற்படிப்புக்காக செல்ல விருந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வா கம் மாணவிகளுக்கு வழங்க வேண்டிய மாற் றுச்சான்றிதழில் திருப்தி இல்லை (not satisfication) என்று குறிப்பிட்டு உள்ளனர். மாற்றுச்சான்றிதழை பெற்ற மாணவிகள் அதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். மாணவர் சங்கம் கண்டனம் இந்நிலையில், பல்கலைக்கழக மாண வர்கள் ஜனநாயக ரீதியில் நடத்திய போராட் டத்திற்கு, அவர்களை பழிவாங்கும் நடவ டிக்கையில் ஈடுபட்ட சேலம் பெரியார் பல் கலைக்கழக நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்க ளுக்கு மாற்றுச்சான்றிதழை மாற்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட தலைவர் அருண்குமார், நிர்வா கிகள் டார்வின், கோகுல்ராஜ் ஆகியோர் நிர்வாகத்திடம் பேசினர். இதனைத்தொ டர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு வார காலத்திற்குள் மாற்றுச்சான்றிதழை மாற்றி வழங்குவதாக உறுதி அளித்தனர்.