districts

img

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு

கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதி யில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரியில் ’மக்களு டன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டா லின் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, இ-சேவை மையத்தை பார்வையிட்டார். இத்திட்டம் குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுத்துறைகளை அன்றாடம் அணுகும் பொது மக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவை களை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் டிச.18 முதல் (திங்களன்று) ஜன.6 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சி கள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டி யுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத் தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும். இம்முகாம்களில் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறை யில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படை யில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.