கோவை, ஜூன் 20- விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து இருகூர் பாரத் பெட்ரோலிய நிறு வனத்தை முற்றுகையிட்ட விவசாயி கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கோவை மாவட்டம், இருகூரிலி ருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது. இதில், முத்தூர் வரை விளைநிலங்கள் வழியாக குழாய் கள் பதிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இருகூர் முதல் முத்தூர் வரை எண்ணெய் குழாய்களை சாலையோரம் அமைத் திட வலியுறுத்தியும் வியாழனன்று இரு கூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறு வனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வளாகத்தை முற்றுகையிட்டனர். இத னையடுத்து, விவசாயிகள், பாரத் பெட் ரோலியம் நிறுவனத்தின் அதிகாரி களை நேரில் சந்தித்து மனு அளித்த னர். தொடர்ந்து, சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமபந்தி முகாமிலும் விளை நிலங்களில் எண் ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட் ரோலியம் நிறுவனத்தின் நடவடிக்கை களை தடுக்க வலியுறுத்தி மனு அளித் தனர். முன்னதாக, விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரத் பெட்ரோலியம் நிறு வனம் ஏற்கனவே கோவை மாவட் டம், இருகூர் முதல் கரூர் வரை விவசாய விளைநிலங்கள் வழியாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் குழாய் அமைத்துள்ளது. இதனால், திட் டப் பகுதியில் எவ்வித விவசாயமும் செய்ய முடியாமல், வருவாய் ஈட்ட முடி யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள விவசாய நிலங்கள் கோடிக்க ணக்கில் விற்கும் போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கேட் பாரற்றுக் கிடக்கின்றன. அரசு வங்கிகள் முதல் உள்ளூர் கந்து வட்டிக்காரர் வரை யாரும் எண்ணெய் குழாய்கள் பதிக்கப் பட்ட நிலத்திற்கு கடன் கொடுப்ப தில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு எண் ணெய் குழாய் அமைப்பதற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது. தற் போது இரண்டாவது திட்டம் கோவை மாவட்டம், இருகூரிலிருந்து பெங்க ளூரு வரை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முத்தூரிலிருந்து, பெங்களூர் வரை 270 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரமாகவே அமைக்கப்பட உள்ளது. ஆனால், முத் தூர் வரை ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள குழாயின் அருகிலேயே மீண்டும் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கெயில் எரிவாயு குழாய் திட் டத்தை 360 கிலோமீட்டர் தூரமும், இந்தி யன் ஆயில் எண்ணெய் குழாய் திட்டம் 152 கிலோமீட்டர் தூரத்திற்கும், இதே திட் டம் முத்தூர் முதல் பெங்களூர் வரையி லும் சாலை ஓரமாக அமைக்க வேண் டும் என கொள்கை முடிவெடுத்து செயல் படுத்தி வருகிறது. ஆனாலும், இந்நிறுவனம் மீண்டும் விவசாய நிலத்திற்குள் வருவது விவசா யிகளை கடுமையாக பாதிக்கிறது. எனவே, இருகூர் முதல் கரூர் வரை அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயை தோண்டி எடுத்து சாலை ஓர மாக அமைக்கவும், புதிதாக திட்ட மிட்டுள்ள இரண்டாவது எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக அமைக்கவும் வலியுறுத்தியுள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செவி சாய்க் காவிட்டால் காலவரையற்ற போராட் டத்தை முன்னெடுப்போம் என்றார்.