அழிவின் விளிம்பில் உள்ள ஆலம் பாடி நாட்டு இன மாடுகளை காப்பாற்ற துவங்கப்பட்ட, கால்நடை இன ஆராய்ச்சி நிலையம் தற்போது சிறப் பாக செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம், ஒகேனக் கலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலை வில் தமிழக – கர்நாடகா மாநில எல்லை யில் அமைந்துள்ள கிராமம் ஆலம் பாடி. இந்த ஊரில் தோன்றிய மாட்டி னமே ‘ஆலம்பாடி நாட்டு மாடு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை மாட்டினங்கள் வண்டி இழுப்பதற்கும், விவசாய உழவுப் பணிகளுக்கும் தோதாக பயன்படுகின்றன. சுறுசுறுப் பாக வேலை செய்யக்கூடிய ஆலம் பாடி மாடுகள், நீண்ட கால்களையும், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியையும், கனத்த கொம்பையும் கொண்டிருக்கும். இந்த மாட்டினங்க ளுக்கு குறைந்த அளவு தீவனமே போதுமானது. பராமரிப்பு செலவும் குறைவு. இந்த மாடுகள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின் றன. இது தமிழகத்தின் தருமபுரி மாவட் டத்தின் நல்லம்பள்ளி வட்டத்தித்திற் குட்பட்ட பூதனஅள்ளி, கோவிலூர், லலிக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், பென்னாகரத்தைச் சுற்றியுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும் பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளி லும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் மட்டுமே உள் ளன.
அழிவின் விளிம்பில்…
‘உலகத்திலேயே நாட்டு இன மாடு களை பாதுகாத்து, வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தமிழர்கள் தான். ஜல்லிக்கட்டு போட்டிகளால் நாட்டு இன மாடுகள் மீட்டெடுத்து பாது காக்கப்பட்டு வருகின்றன. இயந்திரங் கள் இல்லாத காலத்தில் நாட்டு இன மாடுகளைக் கொண்டே உழவு ஓட்டு தல், நெற்கதிர், ராகி, சோளம், சாமை உள்ளிட்ட தானிய போர் அடித்தல் என விவசாயப்பணிகள் நடைபெற்றன; இன்னும் சில கிராமங்களில் நடை பெற்றும் வருகின்றன. விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் புகுந்த பின்னர் மாடுகளைப் பயன்படுத்துவது குறைந் தது. இடையில் ஜல்லிக்கட்டு நடத்த தடை போன்ற காரணங்களால் வீடுக ளில் நாட்டு மாடுகள் வளர்ப்பதும் குறைந்து கலப்பின ஜெர்சி மாடுகள் வியாபார நோக்கத்தில் பாலுக்காக வளர்க்கப்பட்டதால் நாட்டு இன மாடு கள் இனம் அழியும் நிலைக்கு தள்ளப் பட்டது. அதில் ஆலம்பாடி நாட்டு இன மாடு அழிவின் விளிம்புக்கு சென்றது.
ஆராய்ச்சி நிலையம்
ஆலம்பாடி நாட்டு மாடுகள் குறித்து, தமிழ்நாடு கால்நடை ஆராய்ச் சிப் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்பயனாக ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி நிலை யத்தை, தருமபுரியில் தொடங்க வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன டிப்படையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஆராய்சி நிலையம் தொடங்குவதற் கான அனுமதியும், நிதியும் கோரி, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப் பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆலம் பாடி பசுக்களைக் காக்கவும், இன விருத்தி, உறை விந்து மூலம் சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையமானது காரிமங்கலம் அருகேயுள்ள பல்லேன அள்ளி கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 32 ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி மையத்திற்கு தினசரி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பொது மக்கள் திரண்டு வருகின்றனர். அவர் கள் நாட்டு மாடு வளர்ப்பு குறித்து பயிற்சியும் பெற்றுச் செல்கின்றனர். அதோடு கால்நடை தீவன வளர்ப்பு குறித்தும் கேட்டறிந்து செல்வது கவ னத்தை ஈர்த்து வருகிறது.
விவசாயிகளுக்கு பயன்
“இந்த மாடுகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தருமபுரி மாவட்டத்தில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளதால், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் மூலம், அழிவின் விழிம்பில் இருந்து அவை காக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் பேராசிரியரும், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தின் தலை வருமான முரளி. மேலும், அழிவின் விளிம்பில் உள்ள தமிழ்நாட்டு இன ஆலம்பாடி மாட்டினத்தை மீட்டெடுக் கவே, அரசு இந்த ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. ஆலம் பாடி இன மாடுகளை இனவிருத்தி செய்து, நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகளிடமே ஆலம்பாடி இன மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்திற்கு தேவை யான அனைத்து கட்டமைப்பு பணி களையும் முடித்து, 2 ஆண்டுகளாக முழுமையாக இயங்கத் தொடங்கி யுள்ளது. வரும் காலங்களில் மாதிரி பண்ணைகளாக மாற்ற உள்ளோம். கால்நடை வளர்ப்பு குறித்து ஆலோ சனையும், பசுந்தீவன வளர்ப்பு ஆலோ சனையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கற வைமாடு பண்ணை பராமரிப்பு குறித் தும் விவசாயிகள் கேட்டறிந்து செல் கின்றனர், என்றார்.
பால் பொருட்களுக்கு மவுசு
பசுந்தீவன ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், நிரந் தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 15 பேர் பணி யாற்றி வருகின்றனர். ஆலம்பாடி நாட்டு இனங்களில் தற்போது, கன்று குட்டிகளுடன் சேர்ந்து 40 மாடுகள் இந்த மையத்தில் உள்ளன. இந்த மாடுகளையும், கன்று குட்டிகளையும் பராமரித்து வருகின்றனர். மாட்டுத் தொழுவமானது சுத்தமாகவும், சுகா தாரமாகவும் பராமரிக்கப்பட்டு வருகி றது. அதேபோல் திருச்சி கருப்பு செம் மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகி றது. ஆலம்பாடி நாட்டின மாடுகளின் பால் மிகுந்த ஊட்டச்சத்து வாய்ந்தது. அதனால் இந்த ஆராய்ச்சி மையத்தில் நாட்டு மாட்டு பால் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. நாட்டு மாட்டு நெய்க்கு தனி மவுசு உண்டு. ஜெர்சி மாடுகளின் நெய்யை விட நாட்டு மாடுகளின் நெய் ஒரு லிட் டர் 3 ஆயிரம் ரூபாய் வரை விற் பனை செய்யப்படும். நாட்டு மாடுகள் குறைந்தபட்சம் காலை, மாலை என 2 லிட்டர் வரை மட்டுமே பால் கறப்ப தால், நெய் அதிகமாக காய்ச்சி எடுக்க முடியாது. மக்கள் நாட்டு மாடுகளை அதிகமாக வளர்க்க ஆரம்பித்தால் நாட் டின மாட்டு நெய் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் புகுந்த பின்னர் மாடுகளைப் பயன்படுத்துவது குறைந்தது. இடையில் ஜல்லிக்கட்டு நடத்த தடை போன்ற காரணங்களால் வீடுகளில் நாட்டு மாடுகள் வளர்ப்பதும் குறைந்து, நாட்டு இன மாடுகள் இனம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.