தருமபுரி, அக்.13- கிடப்பில் போடப்பட்ட சனத்குமார் நதியை சீரமைக்கும் பணியை உடன டியாக தொடங்குமாறு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் வத்தல் மலை அடிவார பகுதியில் இருந்து துவங்கும் சனத்குமார் நதி, தரும புரி, கம்பைநல்லூர் வழியாக சென்று தென் பெண்ணையாற்றில் கலக் கிறது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அன்னசாகரம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளின் உபரிநீர் சனத்குமார் நதி வழியாக செல்கிறது. இந்த நதி சுமார் 40 கி.மீட்டர் பகுதியில் உள்ள கால்வாய் மூலம் தருமபுரி சுற்றுவட்டார பகுதி யில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பல ஆண்டு கள் முன்பு வரை பாசன வசதி பெற்று வந்தன.
தற்போது பல்வேறு பகுதி களில் உள்ள கால்வாய்கள் ஆக்கிர மிக்கப்பட்ட நிலையில் தண்ணீர் முழுமையாக சென்றடைவதில்லை.மேலும், சனத்குமார் நதியிலிருந்து செல்லும் கால்வாயில் பெரும் பகுதி செடி, கொடிகள் மற்றும் புதர்கள் மண்டி உள்ளது. இந்த நதியில் பல் வேறு பகுதிகள் கழிவுநீர் கலக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் சனத்குமார் நதி கால்வாய் கழிவு நீர் செல்லும் கால்வாய் போல் மாறி உள்ளது. எனவே, சனத்குமார் நதி தண்ணீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சீர மைக்க வேண்டும். மேலும் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொது மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் ரூ.50 கோடி மதிப் பீட்டில் சனத்குமார் நதி கால்வாயை சீரமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற் கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டப்பணிகள் இதுவரை வெறும் அறிவிப்பாகவே இருந்து தற்போது வரை தொடங்கப்பட வில்லை. எனவே, கிடப்பில் போடப்பட்ட சீர மைப்புப் பணிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தொடங்க வேண்டுமென விவசாயிகள், பொது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.