உடுமலை, ஜன.11- உடுமலை தாலூகா குடிமங்கலம் நால் ரோட்டில் விபத்து கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், தானியங்கி சிக்னல் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையும், பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையும் குடிமங்கலம் பகுதியில் இணையும் இடம் நால்ரோடாக உள் ளது. இந்நிலையில் பொள்ளாச்சியில் பகுதியில் இருந்து குடி மங்கலம் நால்ரோடு வழியாக தாராபுரம், கரூர் மற்றும் ஈரோடு செல்லவும், உடுமலை, மூணார் பகுதியில் இருந்து பல்லடம், திருப்பூருக்கு வேலைக்கு செல்லவும் பொது மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் சாலையாக இந்த சாலையுள்ளது. மேலும், குடிமங்கலம் பகுதியில் தான் காற்றாலை நிறுவ னங்களின் அலுவலகங்கள் உள்ளதால், அந்த நிறுவனத்தின் வாகனங்கள் போக்குவரத்துக்காக இந்த சாலையை அதிக மாக பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொது மக்களுக் கும், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.