திருப்பூர், டிச.14- மடத்துக்குளம் பகுதியில் சமூக நீதி மற்றும் மனித உரிமை கள் பாதுகாப்பு பிரிவின் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத் தியுள்ளது. உடுமலைப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப் பாளரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்செயலா ளர் சி.கே.கனகராஜ் தலைமையில், மார்க்சிய, அம்பேத்கா ரிய, பெரியாரிய அமைப்புகளின் நிர்வாகிகள் செவ்வாயன்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, உடு மலைப்பேட்டை மடத்துக்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியில் அறநிலையத் துறைக்கு உட்பட்ட காளி யம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிப்பாட்டு உரி மையை உறுதிப் படுத்த வேண்டும். மேலும், இப்பகுதிக ளில் நடைமுறையில் உள்ள இரட்டை குவளை முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செருப்பு அணிந்து நடக்க இருக்கும் தடையை நீக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். மடத்துக்குளம் பகுதியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் மூலம் விழிப்புணர்வு கூட் டங்கள் நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மனுவைப் பெற்று கொண்ட காவல் துணை கண்காப் பாளர், கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியருடன் கலந்து ஆலோசித்துத் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.