திருப்பூர், ஏப்.20- திருப்பூர் மாநகரில் சாலையோர வியா பாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரும் வரை தற்போதுள்ள இடத்திலேயே வியாபா ரம் செய்ய அனுமதிக்குமாறு திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) செயலாளர் பி.பாலன் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். புதனன்று மேயர் தினேஷ்குமாரிடம் சிஐ டியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில் கூறப்பட்டு உள் ளதாவது: திருப்பூர் பல்லடம் சாலை, உழவர் சந்தை பகுதிகளில் பல ஆண்டு காலமாக தினமும் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை சாலையோரத்தில் வியாபாரிகள் தரை யில் பழங்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது மாநகராட்சி நிர் வாகத்தின் சார்பில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தள்ளி வைத்து வியாபாரம் செய்ய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. சந்தைப்பேட்டை, உழவர் சந்தையினுள் விற்கப்படும் பொருட்களை இந்த வியாபா ரிகள் வியாபாரம் செய்வதில்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத் திய, மாநில அரசுகளின் அறிவிப்புகளின்படி சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து தரும் வரை ஏற்க ெனவே வியாபாரம் செய்யும் இடங்களி லேயே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள னர்.