உடுமலை, நவ.16- விபத்துகள் ஏற்படும் வகையில் சாலையோரத்தில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளதை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர். உடுமலை தாலுகா, குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளின் இரண்டு புறங் களிலும் தற்போது பெய்த மழையின் காரணமாக விபத்து ஏற்படும் வகையில் முட் புதர்களும், சாலையின் ஓரத்தில் மண் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகு தியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு பொதுமக் களை பாதிக்கும் வகையில் சாலையோரங்களில் வளர்ந் துள்ள முட் புதர்களை அகற்றவும், குழிகளை சரிசெய்யவும் வேண்டும் என்று குடிமங்கலம் விவசாய சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதனிடம் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ஸ்ரீதர், மோகன சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.