districts

img

நலவாரிய குறைபாடுகளை களைந்திடுக

நாமக்கல், மே 29- நலவாரிய குறைபாடுகளை களைய வேண்டும், தொழிலாளர்  நலச்சட்டங்களை சுறுக்கும் ஒன்றிய  அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் தமிழக முழு வதும் ஏழு மையங்களில் நடை பயண பிரச்சாரம்  செவ்வாயன்று (இன்று) திருச்சியில் சங்கமிக் கிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கிய பிரச்சார நடைபயணம் ஞாயிறன்று நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் சென்றடைந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுப்பூதியம் மதிப்பு தொழிலாளர்களை நிரந்தரமாக வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன்  திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் மின்சார சட்ட திருத்தம் உள்ளிட்டவைகளை வாபஸ் பெற வேண்டும். பெட் ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு களை கட்டுப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தலைவர்கள் உரையாற் றினர். முன்னதாக, கிருஷ்ணகிரியில் துவங்கிய நடைபயணம், தரும புரி, சேலம், நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தது. பேருந்து நிறுத்தத் தில் நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு சிஐடியு மாவட்ட உதவி  செயலாளர் சு. சுரேஷ் தலைமை ஏற்றார். சிஐடியு தலைவர் கே.எஸ். வெங்கடாசலம் வரவேற்புரை யாற்றினார். இதில், மாநில உதவி தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாநில உதவி பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், பிரச்சார ஒருங் கிணைப்பாளர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாநிலச் செய லாளர் சி நாகராசன், நாமக்கல் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட பொருளாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர். முடிவில், ஆர்.சக்தி வேல் நன்றி கூறினார். இந்த பொதுக் கூட்டத்தில் திரளானோர் பங்கேற் றனர்.