கோவை, ஜூன் 5 - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் கோவை நீதிமன்ற வாயிலின் முன்பு புதனன்று நடைபெற்றது. ஜாக் அமைப்பின் தலைவர் மீது தமிழ்நாடு பார்கவுன்சில் மேற் கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வழக்கறிஞர்கள் பாது காப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டன. திண்டுக்கல் வழக்கறிஞர்கள் அசோசியேசன், போலி வழக்கறி ஞர்களை கண்டறியவும், முறைப் படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் சான்றிதழ்களை சரி பார்ப்பது, முழுமையான விவ ரங்களை சேகரிப்பது போன்ற நட வடிக்கை மேற்கொண்டன. இதில் போலி வழக்கறிஞர்கள் கண்டறி யப்பட்டனர். இந்த போலி வழக்க றிஞர்களுக்கு ஆதரவாக பார் அசோ சியேசன் அமைப்பு, ஜாக் அமைப் பின் தலைவர் மீது ஒழுங்கு நடவ டிக்கை என்கிற பெயரில் பழி வாங்குகிறது. இந்த நடவடிக் கையை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத் தப்படுவதாக ஜாக் வழக்கறி ஞர்கள் அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க அமைப்பின் நிர்வாகிகளும் தெரி வித்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வா கிகளும், ஜாக் அமைப்பின் வழக் கறிஞர்களுமான ஞானபாரதி, முரு கேசன், ரிச்சர்ட் சிவசாமி, வெண் மணி, மா சே துங், ஆ.கரீம், சூரிய குமார், ரத்ன சிங்கம், வேலுச்சாமி, செல்வம், ராஜமாணிக்கம், தர்ம ராஜ், பாண்டியன், அகமதுல்லா ஆகியோர் பேசினர்.