districts

img

சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, மார்ச் 20- அந்தியூர் அருகே சீரான குடி நீர் விநியோகம் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லூர் அருகே உள்ள கிரா மம் சொக்கநாதமலையூர். இந்த பகு தியில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளித்திருப்பூர் - சென்னம்பட்டி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இதன்காரணமாக சொக்க நாதமலையூர் கிராமத்துக்கு குடிநீர் சீராக விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டு சனியன்று, ஒலகடம் - வெள்ளித்திருப்பூர் சாலையில் சீரான குடிநீர் விநியோ கம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி குகநா தன், காவல் ஆய்வாளர் மோகன் ராஜ், வெள்ளித்திருப்பூர் காவல் துணை ஆய்வாளர் விஜயகுமார், பட்லூர் ஊராட்சி தலைவர் சக்தி வேல் ஆகியோர் போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண் டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதிக்கு குடி நீர் சரியாக வரவில்லை. மேலும், வருகின்ற குடிநீரும் கலங்கலாக உள்ளது. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகி றோம். எனவே எங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதைக்கேட்ட அதிகாரிகள், விரை வில் குடிநீர் கிடைக்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதன்பின் அனைவரும் கலந்து சென்றனர். இம்மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.