districts

img

தாராபுரத்தில் மின் சிக்கன வார விழா பிரச்சாரம்

தாராபுரம், டிச.20- தாராபுரத்தில் மின் சிக்கன வார விழாவையொட்டி பிரச் சார பேரணி நடைபெற்றது. தாராபுரம் கோட்ட மின்வாரியம் சார்பில் தேசிய மின் சிக் கன வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தாராபு ரம் வட்டாரத்தில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பிரச்சா ரம் அகரம் பப்ளிக் பள்ளியில் செயற்பொறியாளர் வ.பாலன்  தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி செயற்பொறி யாளர்கள், உதவி மின்பொறியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ  மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மின்சிக்கனம்  குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மின்சிக்கனம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடை பெற்ற கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற் றது.