districts

img

பொது விநியோகத் திட்டம்: சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 26 - பொது விநியோகத் திட்டத்தைத் தனித் துறையின் கீழ் அமல்படுத்தக் கோரி திருப்பூர் மாவட்டக் கூட்டுறவு  பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் குரன் சிலை முன்பாக திங்களன்று நடை பெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் பி.கௌத மன் தலைமை வகித்தார். இதில் அனைத்து கூட்டு றவு சங்க ஊழியர் களுக்கும் ஓய்வூ தியம், நியாயவிலைக் கடை ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய 3 சதவிகித  அகவிலைப்படி நிலுவை, சரண்டர்  விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க  கோரியும், தொடக்க வேளாண்மை  கூட்டுறவு சங்கங்களில் புதிய கடன்  வழங்குவதை உறுதி செய்யவும், அரசு  விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் நியாயவிலைக் கடைக ளுக்கு விடுமுறை வழங்கவும்,பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையின் கீழ் அமலாக்கவும் வலியு றுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப் பப்பட்டன.  சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் பி. பாலன், கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், சிஐடியு நிர்வாகி அ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். நிறைவாக சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் பி.சுரேஷ்  நன்றி கூறினார்.

;