districts

பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு

அவிநாசி, டிச.12- அவிநாசி அருகே அம்மாபா ளையம், கானக்காடு பகுதியில் உள்ள  பாறைகுழிகளில் குப்பை  கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஞாயிறன்று பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவி நாசியை அருகே திருமுரு கன்பூண்டி பேரூராட்சிக்கு உட் பட்ட கணபதி நகர் பிரிவு மற் றும் கானக்காடு பாறைக் குழி களில் திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் சேகரிக்கப்படும் மருத் துவக் கழிவுகள் மற்றும் குப்பை களை  லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வரு கின்றது. இதனால் அப்பகுதி களில் வசிக்கும் பொதுமக்க ளுக்கு சுவாச கோளாறு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடுமை யான துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருக்க முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ஆகவே, இப்பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டுவதை  உடனடியாக திருப்பூர் மாநக ராட்சி நிறுத்த வேண்டும் எனக் கோரி, ராமகிருஷ்ணன் பள்ளி வீதி, ராம் நகர், செல்வா விநாய கர் வீதி, கம்பர் வீதி, பத்மாவதி நகர், குமரன் காலனி, எஸ்கே அவென்யு, சுகம் ரெசிடென்சி, சொர்ணபுரி கார்டன் உள்ளிட்ட சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட குடி யிருப்போர் பகுதிகளில் வசிக்கும்  இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் மற்றும் அனைத்து அர சியல் கட்சியினர் அம்மாபாளை யத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் முன்பு உள்ள இருபுற சாலையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் பாரதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன் னாள் பேரூராட்சித் தலைவர் லதா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பூபதி, திராவிடர் விடுதலைக் கழகம் முகில் ராசு, மக்கள் நீதி  மையம் இன்பராஜ், ஊர் தலை வர் ஜெயக்குமார், துணைத் தலை வர் கருப்புசாமி உட்பட அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக் கைகள் உடனடியாக நிறைவேற் றாவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ள னர்.

;