tamilnadu

img

பட்ஜெட் நகலைக் கிழித்தெறிந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

நாமக்கல், ஜூலை 26- மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மாற் றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு நிதியை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 0.025 விழுக்காடு மட்டுமே  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற் றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாநிலக்குழு சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டி வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு  தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன் றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித் தும், நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். இதனையடுத்து, அங்கு அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஊராட்சி பகுதிகளில் நூறு நாள்  வேலை திட்டத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கு வேலை வழங்குவது குறித்து, உயர் அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இந்த நிகழ்வில்  மாற்றுத்திறனாளிகள் மோகனூர் தாலுகா நிர்வாகிகள் மாதேஸ்வ ரன், பெருமாள், பாலப்பட்டி கிளைத்  தலைவர் யோகராஜா, கணேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.  ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. அந்தியூர் அருகே பட்லூர் நால் ரோட்டில் மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் டி. சாவித்திரி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வீரப்பன்சத்தி ரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நகரச் செயலாளர் செந்தில்  தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் (பொ) ப.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பவானிசாகர் தபால் அலுவல கம் முன்பு மாவட்ட துணைச்செய லாளர் ஆர்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி. ராஜ், ஒன்றியத் தலைவர் பி.சுப்பிர மணி உட்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.