tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரியுடன் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ஒன்றிய மோடி அரசின் 3 கொடிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் ஜூலை 29 அன்று தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் தமிழக வழக்கறிஞர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தை ஆதரித்து உரையாற்ற வருகை தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை வெள்ளியன்று நேரில் சந்தித்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் வி.கே.சுப்பிரமணியன், செயலாளர் வ.ஜெயராஜ், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் பொருளாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் க.சதீஷ்குமார், அகில இந்திய வழக்கறிஞர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் என்.முத்து அமுதநாதன் ஆகியோர்  அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை சீத்தாராம் யெச்சூரி ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.