திருப்பூர், டிச.12- ஊத்துக்குளியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் கட் டிடப் பணியை நிறுத்தக் கோரி திங்களன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 3679ஐ வடுகபாளையம் கிராம புல எண். 12/1ஏ என்ற இடத்தில் பொதுமக்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும், தொழில் நடத்துவோருக்கும் இடையூறாக மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது அப்படி அமைத்தால் பொது அமைதி கெடும் என ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தனிநபரின் லாபத்திற் காக டாஸ்மாக் கடைக்கான கட்டுமான பணியை மேற் கொண்டு வருகின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கே.கே. நகர், எம்.ஜி.ஆர்.நகர், பி.ராமமூர்த்தி நகர், வெள்ளைக்கவுண் டர் புதூர் பொதுமக்கள் டாஸ்மாக் கடை கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திங்க ளன்று ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஊத்துக்குளி வட் டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.