districts

img

மேயரிடம் மாதர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், டிச. 23 - திருப்பூரில் சீர்மிகு நகரம் திட் டத்தில் மாற்றி அமைக்கப்பட்ட கலைஞர் பேருந்து நிலையத்தில் பொது  மக்களுக்கும், பயணிகளுக்கும் குடிநீர்  வசதி செய்து தர வேண்டும் என்று  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் மாநகர மேயரிடம் நேரில் வலியுறுத்தினர். இதனையேற்று, உட னடியாக பேருந்து நிலையத்தில் குடிநீர்  வசதியை மேயர் ஏற்பாடு செய்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க தெற்கு மாநகர நிர்வாகிகள் பானு மதி, மினி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்  பா.லட்சுமி, இ.அங்கு லட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜி.சாவித்திரி, ஆர். மைதிலி உள்ளிட்டோர் வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாநகர மேயர் என். தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித் தனர். திருப்பூரில் சீர்மிகு நகரம் திட்டத் தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அதில் பழைய பேருந்து நிலையம் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி  பேருந்து நிலையம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத் திற்கு வரும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் பயணிகளுக்கு உரிய  குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பேருந்து  நிலையத்தில் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வசதி இலவசமாக செய்து தர  வேண்டும் என்று மாதர் சங்க நிர்வாகி கள் மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டுக்  கொண்டனர். மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ள நிலையில் மேயர் தினேஷ்குமார் உடனடியாக பிரச்சனையில் கவனம் செலுத்தி பேருந்து நிலையத்தில் குடி நீர் வசதி செய்து தர ஏற்பாடு செய் தார்.