நாமக்கல், செப்.22- வருவாய்த்துறையினரின் மெத்தனப்போக்கை கண்டித்து திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளைம் அருகே நிபந்தனையுள்ள எச்எஸ்டி பட்டாக்கள் வைத்தி ருப்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் மற்றும் இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த மே மாதம் 6ஆம் தேதி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உடனடியாக மனுவில் உள்ள கோரிக்கை விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோக்கலை கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக உதவியாளர் பாண்டியன் ஆகி யோர் கிராமத்திலேயே தங்கி பணி புரிய வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா கிராமத்தில் தங்கி பணியாற் றாமல் இருப்பதால், வருவாய்த் துறையினர் அதிகாரிகள் உடனடி யாக தலையிட்டு கிராம நிர்வாக அலுவலர் மல்லிகாவை கிரா மத்தில் தங்கி பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் தலைமை வகித் தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.தேவராஜ். முன்னிலை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ரங்கசாமி கோரிக்கை களை விளக்கி சிறப்புரை யாற்றினர். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். அலமேலு, எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் ஜீ.பழனி யம்மாள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் ஆர்.ரமேஷ், பி.விஜய், ஏ.ரஹ்மத், எஸ்.ராஜி, ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி ஆகி யோரிடம் 2ஆவது முறையாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.