கத்தி முனையில் சொத்து கிரயம் மாற்றுத்திறனாளி புகார்
ஈரோடு, டிச.16- கத்தி முனையில் தனது சொத்தை கிரயம் பெற்றதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் புகார ளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் செல்வி. மாற்றுத்திறனாளியான இவரது கண வர் மணி. இவர்களுக்கு மோகன்பிரபு என்ற மகன் இருக்கி றார். இந்நிலையில், கடந்த 2021 இல் செல்வியின் கணவர் மணி இறந்தார். இதன்பின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் செல்விக்கு அறிமுகமானார். அவர் சொத்தை விற் றுத்தருவதாகக் கூறியதை நம்பி, அவரிடம் பத்திர நகல் களை கொடுத்தார். பின்னர், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 15.11.2024 அன்று அழைத்தார். அங்கு என் மகனை மதுகுடிக்க வைத்து மயக்கத்தில் கையெழுத்து பெற்றனர். என்னையும் கையெழுத்து போடச் சொல்லி 5 பேர் என்னைச் சூழ்ந்து கொண்டு மிரட்டி வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்ற னர். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி யான செல்வி, தனது சொத்தை மோசடி செய்து, மிரட்டி கிர யம் செய்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா றும், சொத்தினை மீட்டுக் கொடுக்குமாறும், உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்குமாறும் திங்களன்று குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் செல்வி மனு கொடுத் தார்.
தொழிற்சாலைகளில் பாலியல் புகார் கமிட்டி: அனைத்து பனியன் தொழிற்சங்கள் கோரிக்கை
திருப்பூர், டிச.16 - திருப்பூர் மாவட்டத்தில் 10 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்கூடங்க ளில் விசாகா குழு இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும் என திங்களன்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள் ளன. அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள், திங்களன்று மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டத்தில் இயங்கி வரும் 6000-க்கும் மேற்பட்ட பனியன் தொழிற்சாலைக ளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான தொழிற்சாலைகளில் சட்டப்படியான வேலை நேரம் மற்றும் வார விடுமுறை உள்ளிட்ட தொழிற் சாலை சட்டங்களை முறையாக அமல்ப டுத்துவதிவில்லை. மேலும் இ.எஸ்.ஐ பிஎப் போன்ற தொழிலாளர் நல சட்டங் களும் அப்பட்டமாக மீறப்பட்டு வரு கின்றன. தொழிற்சாலைகளில் ஓவர் டைம் வேலை என்பது 3 மாதத்தில் 75 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. எனவே இரட் டிப்பு சம்பளம் வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும். பனியன் தொழிற் சாலைகளில் பணியாற்றும் பீஸ் ரேட் மற் றும் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவு தொழிலாளர்களை யும் இ.எஸ்.ஐ பிஎப் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் திருப்பூரில் புதிதாக கட்டப் பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளபோதிலும் துறைவா ரியாக மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட வில்லை. எனவே மருத்துவமனைக்கு தேவையான நவீன உடல் பரிசோதனை உபகரணங்கள் வழங்கி லட்சக்கணக் கான தொழிலாளர்களுக்கு திருப்பூ ரிலேயே முழுமையாக மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீது இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஎஸ்ஐ பிஎப் குறித்து தொழிலாளர்களுக்கு ஏற்ப டும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்த வேண் டும். திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் ரீதியான குற்றச்சாட்டு களை விசாரிக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் குழுக்களில் பெண் கள் அமைப்பின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இந்த விசாகா குழுவின் தலைவராக பெண் அதிகாரியை நியம னம் செய்ய வேண்டும். குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல் வெளியிடத்தில் இருந்து நியமிக்க வேண்டும். இந்த குழு ஆண்டுதோறும் அதன் செயல்பாடு களை அறிக்கையாக தயாரித்து அரசி டம் வழங்க வேண்டும். 10 பேருக்கு மேல் பணியாற்றுகிற தொழிற்கூடங்களில் விசாகா குழு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர் விபரம் புகார் பெட்டி தொடர்பு எண் உள்ளிட்டவைகள் தொழிலாளர்களுக்கு தெரியப்படுத் தும் விதமாக வெளிப்படையாக உள் ளதா என்பதை கண்காணிக்க வேண் டும். தொழிற்சாலைகளுக்கு வெளியில் மக்கள் கூடும் இடங்களில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட அளவில் அமைக் கப்பட்டுள்ள விசாகா குழு விவரம், தொடர்பு எண் கொண்ட விளம்பரங்கள் வைக்க வேண்டும். ஆங்காங்கே புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். பெண் கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சமூக நலத் துறையின் மூலம் நடத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத் துவமனை மற்றும் அதன் செயல்பா டுகள் குறித்து கலந்து பேசி தீர்வு காண்ப தற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை புதுப்பிக்க வேண்டும். இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதி கள் இடம் பெறும் வகையில் குழுவைத் திருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம் எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்கழிப்பிடத்தை அகற்றும் நடவடிக்கையை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அவிநாசி, டிச.16 - திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம் அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை அகற்றும் நடவ டிக்கையைக் கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அம்மாபாளையம் கிளை வலியுறுத்தியுள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட் பட்ட அம்மாபாளையத்தில் திருப்பூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் தனி யார் பள்ளி அருகே நகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பி டத்தை பொதுமக்கள் தினசரி பயன்ப டுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமுரு கன்பூண்டி நகராட்சி நிர்வாகம் பொதுக் கழிப் பிடத்தை அகற்ற உள்ளதாக தெரியவந்துள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபாளையம் கிளைகள், பொதுக் கழிப்பிடத்தை அகற்றக் கூடாது என வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட அதி காரி நகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளாது என உறுதியளித்தார். கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடா சலம், பாலசுப்பிரமணியம், கிளைச் செயலா ளர் ராஜ், தமுஎகச பூண்டி நிர்வாகி காமராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
மருத்துவமனைக்கு ஸ்கேன் வசதி: அதிகாரிகள் உறுதியளிப்பு; வாலிபர் போராட்டம் ஒத்திவைப்பு
திருப்பூர், டிச.16- திருப்பூர் டிஎஸ்கே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தரக்கோரி வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலை யில், ஒரு மாதத்திற்குள் வசதிகளை ஏற்படுத்த உரிய நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைய டுத்து, காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அவிநாசி சாலை குமார்நகர் பகுதி யில் டிஎஸ்கே அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்து வமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுப்ப தற்கான வசதி இல்லாததால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அல்லது தனியார் மருத்துவம னைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த மருத்துவம னையில் ஸ்கேன் வசதி ஏற்படுத்தி, அதற்குரிய பணியாளர் களை நியமிக்க வேண்டும். முழுநேரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி உள்ளன. குடிநீர் வச தியும் இல்லை. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மருத்துவமனை முழுவதும் மண்டிக்கிடக்கும் புதர் களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் வடக்கு நகரக் குழு சார்பில் பொதுமக்களிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தி, மாநகராட்சி அலுவலகத்தில் அக்டோ பர் மாதம் மனு அளிக்கப்பட்டது. இரண்டு மாதம் ஆகியும் நடவ டிக்கை எடுக்காததால், வாலிபர் சங்கத்தினர் டிச.17ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந் தனர். இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின ருடன் திங்களன்று மாநகர் நல அலுவலர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். அப்போது இன்னும் ஒரு மாதத்திற்குள் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து காத் திருப்பு போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், வாலிபர் சங்க மாநகரத் தலை வர் எஸ்.கண்ணன், மாநகரச் செயலாளர் எஸ்.விவேக், மாநக ரக்குழு உறுப்பினர்கள் டி.கீர்த்திகை வாசன், அப்துல் ரஷீத், பிரவீன்குமார், சந்துரு, நவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
மழையால் மலைவாழ் மக்களின் வீடுகள் சேதம்: சீரமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை
திருப்பூர், டிச.16 - தளி பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் மழையால் சேதம் அடைந்த மலைவாழ் மக்க ளின் வீடுகளைச் சீரமைக்க நிதி ஒதுக் குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மனு அளித் துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டம், உடும லைப்பேட்டை தாலுகா தளி பேரூராட் சிக்கு உட்பட்ட 17ஆவது வார்டு பகுதி யில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கண்ணப்பன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்துள்ளது. மேலும் பல வீடுகள் இடியும் நிலையில் உள் ளன. எனவே இந்த வீடுகளில் உள்ள வர்கள் தங்கள் வீடுகளும் இடிந்து விழும் என்னும் அச்சத்தில் உற வினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தளி பேரூராட்சி மூலம் அரசு வீடுகள் கட்டும் திட்டத்தின்படி மதிப்பீடு செய்து ஈரோடு மண்டல பேரூராட் சிகள் உதவி இயக்குனருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டின்படி மாவட்ட நிர்வாகம் விரைவில் நிதி ஒதுக்கி வீடுகள் ஏற் பாடு செய்து மலைவாழ் மக்களின் உயிரை காக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: ஜே.ஜே.நகர் ராக்கியாபாளை யம் பகுதியில் கடந்த 15 ஆண்டுக ளாக 50 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இதே பகுதியில் புளு இன் பாலிமர்ஸ் என்னும் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் சாலையை அடைத்து நிற்பதால் இங்குள்ள குடும்பங்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அறிந்த நிறுவனத்தின் உரிமையா ளர்கள் இங்குள்ள ஒவ்வொரு குடும் பத்தினருக்கும் மிரட்டல் விடுகின்ற னர். மேலும், வாகனங்களை மோது வது போல் ஓட்டுகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக் காமல் உள்ளனர். தற்போது அந்த தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஒருவர் என் உறவினர், பூண்டி பேரூ ராட்சி முன்னாள் தலைவி எங்கள் உற வினர். உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார். எனவே எங்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.ஜே. நகர் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். டாடா சோலார் அமைப்பதற்கு அனுமதி அளிக்கும் முன் விவசாயி களின் கருத்து கேட்க கோரிக்கை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – தாராபுரம் வட்டங்களில் டாடா சோலார் நிறுவனம் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து, அங் குள்ள விளைநிலங்கள் வழியாக தூரம்பாடி கிராமத்தில் உள்ள அதானி நிறுவனத்தின் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்வ தற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறது. 17 கிலோ மீட்டர் தூரத் திற்கு உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு திட்டமிட்டு ஒரு சில இடங்களில் அமைத்துள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படும். விவசாயிகளை பாதிக்காத வகையில் அமராவதி ஆற்றின் ஓரமாக அமைக்கலாம். மேலும், தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் முன் நுழைவு அனுமதி கோரியுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டுள்ளனர். எனவே இதற்கு அனுமதி வழங்கும் முன் விவசாயிகளின் கருத்துகளை யும் கேட்க வேண்டும் என தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு அளித்தனர். அதேபோல் வீடு வாங்கித் தருவதாக ரூ. 11 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
உபரிநீரை ஏரிகளில் நிரப்பக்கோரி விவசாயிகள் மனு
தருமபுரி, டிச. 16- பஞ்சப்பள்ளி சின்னார் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி விவசாயி கள் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரண மாக விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகவும் பின்தங்கிய நிலை யில் உள்ளனர். தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து பஞ்சபள்ளி சின் னார் அணை நிரம்பி உபரி நீர் பாலக் கோடு வழியாக எர்ரனஹள்ளிக்கு வரு கிறது. இதனை பனைகுளம் ஏரியிலி ருந்து பாப்பாரப்பட்டி ஏரி, சஜ்ஜல ஹள்ளி ஏரி, பாலவாடி பெரிய ஏரி, வேலம்பட்டி ஏரி, பள்ளப்பட்டி ஏரி, ஆண் டாரஹள்ளி ஏரி, எட்டியாம்பட்டி அம்மன் ஏரி, காஞ்சன்குட்டை ஏரி, பிலப்பநாயக் கனஹள்ளி ஏரி, தட்டாரப்பட்டி ஏரி, எர்ரப் பட்டி ஏரி, பூகானஹள்ளி ஏரி மேற்கண்ட ஏரிகளில் நீர் நிரம்பினால். இறுதியாக சோகத்தூர் எரிக்கு சென்றடையும். இதன் காரணமாக 16 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும். எனவே, எர்ரனஹள்ளி கால்வாய் வழி யாக எங்களுக்கு தேவையான பஞ்சப் பள்ளி சொன்னார் உபரி நீரை பகிர்ந்து ஏரிகள் அனைத்தும் நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.