districts

img

நேரடியாக விண்ணப்பிக்கும் முறையை தொடர்ந்திடுக

சேலம், ஜன.30- தொழிலாளர் நல வாரிய அலுவ லகத்தில் நேரடியாக விண்ணப் பிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழக தொழிலாளர் நல வாரி யத்தில் இதுவரை சுமார் 30 லட்சம்  பேரும், அமைப்பு சாரா தொழிலா ளர் நல வாரியத்தில் சுமார் 33  லட்சம் பேரும் பதிவு செய்துள்ள னர். அதுமட்டுமின்றி, கட்டுமா னம் உள்ளிட்ட 17 நல வாரியங்க ளில் சுமார் 2 லட்சம் பேர் ஓய்வூ தியம் பெற்று வருகின்றனர். மேலும், ஐந்து லட்சத்திற்கும் அதிக மானோர் கல்வி, திருமணம், மகப் பேறு, விபத்து மூலம் நிதி உதவி யும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கட்டுமான மற்றும் முறைசாரா தொழிலாளர் கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைத்திருந்த, அனைத்து தரவுகளும், ஆவணங்களும் கன மழையின் காரணமாக அழிந்துவிட் டதாக தொழிலாளர் நல வாரிய  அதிகாரிகள் உண்மைக்கு புறம் பான தகவலை தெரிவிக்கின்றனர். இதனால் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மிகுந்த அச்சத் துடன் உள்ளனர்.   எனவே, ஆன்லைன் தரவுகள்  அழிந்தது எப்படி என அரசு முழு மையான விசாரணை நடத்த வேண் டும். உதவி ஆய்வாளர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் முகாம் அமைத்து தொழிலாளர்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான தனி ஏற்பாட்டை  செய்ய வேண்டும். தொழிலாளர் களிடம் உள்ள சான்று ஆவணங் களை எவ்வித ஆய்வுக்கும் உட்ப டுத்தாமல் ஏற்ற வேண்டும். ஆன் லைனில் ஏற்பட்டுள்ள பிரச்சினை களை உடனடியாக முடித்திட வேண்டும். புதுப்பிக்க தவறியவர் களுக்கு கால நீடிப்பு வழங்க வேண் டும். நேரடியாக விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். ஆவணங்களை மீண்டும் பதி வேற்ற தொழிலாளிக்கு ஒரு நாள்  ஊதிய இழப்பு ரூபாய் ஆயிரம்  வழங்கவேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில், சேலம் கோரிமேடு தொழிலாளர் நல  வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் டி. உதயகு மார் தலைமை வகித்தார். மாநில  துணைத்தலைவர் எஸ். கே. தியாக ராஜன், ஆர். சிங்காரவேலு, மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ, கட்டுமான சங்கச் செய லாளர் சி.கருப்பண்ணன், ஆட்டோ சங்கச் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டு கோரிக்கை முழக்க மிட்டனர்.

தருமபுரி

இதேபோன்று தருமபுரி மாவட் டம், தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.அங்கம்மாள், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.சண்முகம், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆனஸ்ராஜ், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.