தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
கோவை, ஜன.3- ஓட்டல் அறையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்த வர் தரணி (43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30 ஆம் தேதி கோவை வந்தார். இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.இதனால், சந்தேகமடைந்த ஊழியர் இது குறித்து லாட்ஜ் மேலாளரிடம் தெரிவித்தார். இதைத்தொ டர்ந்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த னர். அப்போது, தரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்த தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக் குப்பதிவு செய்து தரணி எதற்காக தற்கொலை செய்து கொண் டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்க ளாக ஓட்டல் அறையில் தற்கொலை சம்பவம் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
கோவை, ஜன. 3- கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (74). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி அரு கில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பழனியம் மாள் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக் கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து நகையுடன் தப்பி சென்றார். பின்னர் இது குறித்து பழனியம்மாள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதி யில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி நகைபறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.
திருப்பூரில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நிறைவு
திருப்பூர், ஜன.3 – திருப்பூரில் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் சார்பில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட கட்டிட கட்டுமானப் பொருட் கள் கண்காட்சி திங்களன்று நிறைவடைந்தது. திருப்பூர் வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில், டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 2ஆம் தேதி வரை நடை பெற்ற இக்கண்காட்சியில் 180 அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. இக்கண்காட்சியை 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் பார்வையிட்டனர். ஏராளமான வர்த்தக விசா ரணை நடைபெற்றுள்ளது. சிலர் இங்கேயே தங்களுக்குத் தேவையான கட்டுமான பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு உறுதியளித்தனர். சிலர் நேரடி யாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வந்து பார்வை யிட்டு தேவையான பொருட்கள், சேவையை பெற்றுக் கொள்வதாகத் தொடர்பு எண் பெற்றுச் சென்றனர். இந்த கண்காட்சியில் சிறந்த முறையில் புதுமை அம்சத் துடன் அரங்கு அமைத்ததற்காக ஆர்டிஸ்டிக், கண்ட்ரோல் இன்ஜினியரிங், ரெய்ன் பிவேர் ஆகிய நிறுவனங்களுக்கும், சிறந்த தனி அரங்குகள் அமைத்ததற்காக மேக்ஸ் எக்ஸ் சேஃப் டெக், பர்ப்பிள் பே, வர்ஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களுக்கும், சிறந்த தொகுப்பு அரங்குகள் அமைத் ததற்காக ஏ.கே. பிளைவுட்ஸ், ஏ ஒன் ஸ்டீல்ஸ், ஸ்ரீ கற்பக விநாயகா டைல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த முறையில் காட்சிப்படுத்தி இருந்த அரங்குக்கான விருதை அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் பெற்றது என்று சிவில் இன்ஜினியரிங் சங்கத் தலைவர் சௌ. ஸ்டாலின் பாரதி, கண்காட்சி தலைவர் எம்.துரைசாமி ஆகி யோர் தெரிவித்தனர்.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உடுமலை, ஜன.3- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜன.4) நடைபெறு பெறுகிறது . இக்கூட்டம் புதனன்று காலை 11 மணியளவில் செயற் பொறியாளர் உடுமலைப்பேட்டை அலுவலகத்தில் பொறி யாளர் சி.விஸ்வநாதன், மேற்பார்வைப் பொறியாளர் ஆகி யோர் தலைமையில் நடைபெறுகிறது. உடுமலைப்பேட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர் வோர் தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறு மாறு செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் கைது கார், செல்போன்கள் பறிமுதல்
தாராபுரம், ஜன.3- தாராபுரம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடு பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக் குட்பட்ட சென்னியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜெயசுதா (38). கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள மளிகைகடைக்கு சென்று விட்டு வீடு திரும்புபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஜெயசுதா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து தாராபுரம் குற்ற பிரிவு காவல்நிலையத்தில் ஜெயசுதா புகார் அளித்தி ருந்தார். போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தாராபுரம்- ஒட்டன்சத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது காரில் வந்த 2 பேரை விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதில், சந்தேகமடைந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம், சிந்தாமணியை சேர்ந்த கார்த்தி என்ற மொட்டை கார்த்தி (30), அதே பகுதியைச் சேர்ந்த காமாட்சி (30) என்பது தெரியவந்தது. 2 பேரும் கிராம நிர்வாக அதிகாரி யிடம் நகை பறிப்பு, தாராபுரம் குளத்துப்பாளையத்தில் ஒருவரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது, பொன்னாபுரம் நாம கிரி என்பவரது வீட்டில் திருடியது, தாராபுரம் டாஸ்மாக் மேலாளர் வீட்டில் திருடியது உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் காமாட்சி இருவர் மீதும் மதுரை, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப் பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவில் மது போதையில் இளைஞர்கள் ரகளை
திருப்பூர், ஜன.3 - சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம் மனின் பிறந்தநாள் விழாவில், மது போதை யில் அதிவேகமாக வந்து, சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற் படுத்திய இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நெல்லை மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் அவர்களுக்கு எதிராக வீரம் தெறிந்த போராட் டத்தை நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டி கட்டபொம் மனின் 264 ஆவது பிறந்தநாள் விழா செவ்வா யன்று திருப்பூரில் கொண்டாடப்பட்டது. திருப்பூர்-பாரப்பாளையம் பகுதியில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மனின் திரு வுருவ சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு அரசியல் கட்சியினர் வந்திருந்தனர். இதனிடையே வீரபாண்டிய கட்ட பொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மரி யாதை செலுத்த 100 க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்திருந் தனர். பெரும்பாலானோர் ஒரே வாக னத்தில் மூன்று பேர், நான்கு பேர் என அமர்ந்து கொண்டு அதிவேகமாக வந்த தோடு, சாலையில் சென்ற வாகன ஓட்டி களையும், சாலையோரம் சென்ற பொது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இரு சக்கர வாகனத்தில் குடி போதையில் வந்த இரண்டு பேர் சாலையின் ஓரம் நிறுத்தி இருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இந்த விபத்தில் மூன்று இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடமும் அந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், ரகளையில் ஈடுபட்ட பண்பாட்டு கழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலை யத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டி வந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதை யடுத்து கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நடந்து சென் றனர். விபரீத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்தினர்.